(இராஜதுரை ஹஷான்)
இலங்கையில் உள்ள நீதிபதிகள் தமது கடமைகளை மேற்கொள்வதில் ஏராளமான சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இலங்கை பொதுச் சட்ட பாரம்பரியத்தைப் பின்பற்றுவதால், நாட்டின் மேல் நீதிமன்றங்களால் வெளியிடப்பட்ட தீர்ப்புகளிலிருந்து வெளிப்படும் பல்வேறு விளக்கங்களையும் கருத்துகளையும் நீதிபதிகள் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர் கோதாகொட வலியுறுத்தினார்.
சட்டத்தரணி விஜித குமாரகேயினால் எழுதப்பட்ட 'பிணை தொடர்பான சட்டம்' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று கொழும்பில் இடம்பெற்றது.இதன்போது உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாடு முழுவதும் உள்ள சில நீதிவான்கள், தங்களுக்குரிய பொறுப்புகளின் சுமையைக் கருத்தில் கொள்ளாமல், இன்னும் ஒரு பேனாவை மட்டுமே பயன்படுத்தி தங்களது அன்றாட நீதிமன்றப் பணிகளைக் கையால் எழுதுகிறார்கள்.
ஒரு சந்தேக நபருக்கு பிணை வழங்குவதா அல்லது அவர்களை விளக்கமறியலில் வைப்பதா என்பது ஒரு நீதிவான் எடுக்க வேண்டிய மிக முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான முடிவுகளில் ஒன்றாகும்.நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் சமர்ப்பிப்புக்கள், ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை கவனமாக மதிப்பீடு செய்த பின்னர், வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் நீதிமன்ற முடிவுகளுடன் உடன்படவோ அல்லது உடன்படாமலோ இருக்க சுதந்திரம் உள்ள போதிலும், நீதித்துறை உறுப்பினர்களை விரைவாக தவறாகப் புரிந்து கொள்ளவோ அல்லது நியாயமற்ற மதிப்பிடவோ கூடாது. ஏனெனில் பொதுமக்களின் கருத்துக்கள் பெரும்பாலும் முழுமையற்ற தகவல்களாலேயே கட்டமைக்கப்படுகின்றன என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM