நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

19 Jul, 2026 | 03:20 PM
image

நொச்சியாகம பகுதியில் நீர் நிரம்பிய பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற நபர், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்தர குளம் பகுதியில் உள்ள கற்குவியல்களுக்கு நடுவில் உள்ள நீர் நிரம்பிய பகுதியில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (18) உயிரிழந்துள்ளார்.

மீன்பிடிக்கச் சென்ற நபர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், அவரைத் தேடிப்பார்க்கச் சென்ற போதே குறித்த நபர் சடலமாகத் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதற்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்த நபர் 62 வயதுடைய அந்தர குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

குறித்த நபரின் சடலம் மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்தும், ஒரு...

2026-08-11 21:31:06
news-image

இடைநிறுத்தப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களை மீள...

2026-08-11 21:07:41
news-image

மகாநாயக்க தேரர்களின் கடிதம் குறித்து அரசாங்கம்...

2026-08-11 16:48:47
news-image

முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய எரிபொருள்...

2026-08-11 16:47:55
news-image

நாவற்குழி சமூகச் சுத்திகரிப்பு முயற்சியில் SCJ...

2026-08-11 19:57:11
news-image

பொலிஸ் மாஅதிபருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல்...

2026-08-11 19:53:39
news-image

புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்...

2026-08-11 19:53:34
news-image

ஆடி அமாவாசை : கொழும்பு காக்கைதீவு...

2026-08-11 19:45:53
news-image

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு...

2026-08-11 19:34:05
news-image

நலிந்தவின் கூற்றால் அரசாங்கத்தின் உண்மை முகம்...

2026-08-11 18:53:35