தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு நாட்டில் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறை நிலவி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (18) கேகாலை மாவட்டத்தின் தெதிகம தேர்தல் தொகுதியில் நடைபெற்ற கட்சியின் வட்டாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போதைய காலகட்டமானது நாட்டில் தற்கொலைகள் அதிமாக இடம்பெறும் ஒரு காலமாக மாறியுள்ளது என நான் கருதுகிறேன். அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சில அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் இடங்களுக்குச் சென்று, 'நீங்களும் தற்கொலை செய்துகொள்ள வேண்டி வரும்' என அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு உள்ளானவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி, மக்களை நசுக்கி, அடக்குமுறைகள் மூலம் ஆட்சியைத் தொடரலாம் என்று நினைத்தால் அது தவறானது. நாம் கிராம மட்டத்திலிருந்து இதற்கு எதிராக அணிதிரள்வோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் நீதித்துறை அமைப்பை அரசியல்மயமாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனால், காமன்வெல்த் சட்டத்தரணிகள், ஆசிய சட்டத்தரணிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிபதிகள் சங்கம் ஆகியன நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்கப் போராடி வருகின்றன.
மறுபுறம் அரச சேவை முழுமையாக சீரழிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள் நாட்டின் நலனுக்காக நேர்மையான முடிவுகளை எடுத்தால், அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே இன்று காணப்படுகிறது. கடந்த கால இயற்கை அனர்த்தங்களின் போது அரச கட்டமைப்பு முடங்கிக் கிடந்ததற்கு அதிகாரிகளின் கைகள் சட்டரீதியாகக் கட்டப்பட்டிருந்தமையே காரணமாகும்.
"இலங்கை வரலாற்றிலேயே மிக மோசமான முறையில் வரிகளை விதித்த அரசாங்கமாக இந்த அரசாங்கமே காணப்படுகிறது. வெற்றிலை முதல் அத்தனையிலும் வரி விதிக்கப்படுகிறது. அரசாங்கம் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டியதாகக் கூறினாலும், மக்களின் வரிப் பணத்தில் கிராமத்து வீதிகளோ, விகாரைகளோ, பாடசாலைகளோ அல்லது வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளோ அபிவிருத்தி செய்யப்படவில்லை.
மாறாக, அரசாங்கத்தின் கணக்கில் இருந்த கோடிக்கணக்கான ரூபா பணத்தை ஹேக்கர் ஒருவர் திருடிச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். தற்போது மத்திய வங்கியும் நிதியமைச்சும் மாற்றி மாற்றிக் குற்றஞ்சாட்டிக் கொள்கின்றன. தவறு யாரிடம் இருந்தாலும், இறுதியில் அதற்கான சுமையை மக்கள் மீதே சுமத்துகிறார்கள்.
விவசாயிகள், தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் என அனைவரும் மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் அநியாய வரிவிதிப்பால் நசுக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்படுகிறார்கள். திருடியவர்களைப் பிடிக்காமல், திருட்டைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீதே பொலிஸார் வழக்குத் தொடர்கின்றனர்.
எனவே, அரசாங்கத்தின் இந்த அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் முகங்கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர். இனியாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்" என நாமல் ராஜபக்ஷ தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM