நவீன மனித சமுதாயத்தில் மதமும் ஆன்மீகமும் மிகவும் அடிமட்டத்திற்குத் தள்ளப்பட்டு, மனித விழுமியங்கள் சீரழிந்து வருவதாகக் கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார்.
மாகேவிட்ட பகுதியில் அமைந்துள்ள 'திவ்ய இரட்சகர்' தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு ஜூபிலி திருவிழா விசேட மாலை கூட்டுத்திருப்பலியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வளர்ச்சியடைந்த நாடுகளின் தற்போதைய ஆன்மீக வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டி கர்தினால் மேலும் உரையாற்றுகையில்,
பல வளர்ந்த நாடுகளில், மக்கள் வார இறுதி நாட்களில் தேவாலயங்களுக்குச் செல்வதை விடுத்து, தங்களது பொழுதுபோக்கு மற்றும் உல்லாசப் பயணங்களிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர்.
ஐரோப்பா முழுவதும் உள்ள பிரம்மாண்டமான பேராலயங்கள் இன்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போயுள்ளன. ஆனால், அங்குள்ள கால்பந்து மைதானங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலெனத் திரள்கின்றனர். இது மனிதர்களின் முன்னுரிமைகள் மாறியுள்ளதைக் காட்டுகிறது.
பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் வளர்ந்த நாடுகளாகக் கருதப்படும் பல சமூகங்கள், தார்மீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பாரிய வீழ்ச்சியைக் கண்டு வருகின்றன.
மனிதர்கள் தங்களின் உன்னதமான மனித விழுமியங்களையும் பண்புகளையும் மறந்துவிட்டு, தங்களது பௌதிக மற்றும் சரீரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இத்தகைய நவீன சமூக அமைப்பில், மனிதனின் ஆன்மீக வாழ்க்கையானது மிகவும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டு, மிகக் குறைந்த இடத்தையே பிடித்துள்ளதாகப் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தனது பிரசங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM