தமிழ்ப் பேசும் கட்சிகளின் உடன்பாடு வரவேற்கத்தக்கது

19 Jul, 2026 | 12:18 PM
image

தமிழ்ப் பேசும் மக்­களின் பொது­வான விட­யங்­களில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு 6 கட்­சி­களின் தலை­வர்கள் உடன்­பாடு கண்­டுள்­ளனர். தமிழ்ப்பேசும் கட்­சி­க­ளான இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், ஜன­நா­யக தமிழ் தேசியக் கூட்­டணி ஆகிய கட்­சி­களே இவ்­வாறு ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு இணக்­கப்­பாட்டை எட்­டி­யுள்­ளன.

கொழும்பில் கடந்த 13ஆம் திகதி திங்­கட்­கி­ழமை 6 தமிழ்ப் பேசும் கட்­சி­களின் தலை­வர்­களும் ஒன்று சேர்ந்து செய்­தி­யாளர் மாநாட்­டினை நடத்தி தமக்­குள்­ளான இணக்­கப்­பாடு குறித்து அறி­வித்­தி­ருந்­தனர்.

அதி­யுச்ச பகிர்­வுக்­கான புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம், மாகாண சபைத் தேர்தல் மற்றும் சகல இனத்­த­வர்­களும் எதிர்­கொள்ளும் காணிப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணல் ஆகிய விட­யங்கள் தொடர்பில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முதற்­கட்­ட­மாக இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வது தொடர்பில் அர­சாங்­கத்­திடம் ஒரு­மித்த கோரிக்­கை­யொன்றை முன்­வைப்­ப­தற்கும், இதன்­போது, காணப்­படும் அடிப்­படைப் பிரச்­சி­னைக்கு பேச்­சு­வார்த்தை ஊடாக தீர்வு பொறி­மு­றை­யொன்றை வகுப்­ப­தற்கும் இந்தக் கட்­சி­களின் தலை­வர்கள் உடன்­பட்­டுள்­ளனர்.

அர­சியல் கட்­சிகள் ஒவ்­வொன்றும் தமது கொள்கை, அர­சியல் நிலைப்­பா­டு­களை தனித்­த­னி­யாகப் பேணு­வ­தற்கும் முன்­வைப்­ப­தற்கும் சுதந்­திரம் இருப்­பதை ஏற்றுக் கொண்ட இந்தக் கட்­சி­களின் தலை­வர்கள், பொது­வான விட­யங்­களை இனங்­கண்டு, சாத்­தி­ய­மான சந்­தர்ப்­பங்­களில் ஒருங்­கி­ணைந்து நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தள­மாக இந்த இணக்­கப்­பாடு அமைந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர்.

தமிழ்ப்பேசும் 6 கட்­சிகள் ஒன்­றி­ணைந்து பொது­வான இணக்­கப்­பாட்­டுடன் செயற்­ப­டு­வ­தற்கும் தீர்­மா­னித்­துள்ள விவ­காரம் தொடர்பில் பல்­வேறு தரப்­பி­னரும் சர்ச்­சை­களை கிளப்பி வரு­கின்­றனர். இந்த உடன்­பாட்­டுக்­கான பின்­னணி தொடர்­பிலும் கேள்­வி­களை எழுப்பி வரு­கின்­றனர்.

தமிழ்ப் பேசும் கட்­சி­களின் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து ஒரு­மைப்­பாட்­டுடன் செயற்­பட முன்­வந்­தமை தொடர்பில் அர­சாங்கத் தரப்­பி­லி­ருந்தும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ள அமைச்­ச­ர­வையின் பேச்­சாளர் அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ,

“நாட்டில் தமிழ், முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தைக் கொண்ட 6 பிர­தான கட்­சிகள் உடன்­பா­டு­களை எட்­டி­யுள்­ளமை மற்றும் எதிர்க்­கட்­சியில் ஏற்­பட்­டுள்ள பிள­வுகள் என்­பன அர­சாங்­கத்தின் பல­வீ­னத்தால் உரு­வா­ன­வை­யல்ல. எதிர்க்­கட்­சி­யி­னரை ஒன்­றி­ணைத்து வழி­ந­டத்­து­வது எதிர்க்­கட்சித் தலை­வரின் பொறுப்­பாகும். இந்தக் கூட்டு முயற்­சியின் பின்­ன­ணியில் அர­சாங்­கத்­துக்கு எந்த சம்­பந்­தமும் இல்லை” என்று தெரி­வித்­தி­ருந்தார்.

தமிழ்ப்பேசும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு இந்த அர­சாங்கம் தீர்வு வழங்­காது என்றோ அல்­லது அர­சாங்­கத்­துக்கு எதி­ராக மக்கள் மத்­தியில் எதிர்ப்­பலை உரு­வா­கி­யதன் கார­ண­மா­கவே எதிர்க்­கட்­சிகள் இவ்­வாறு ஒன்­றி­ணை­கி­றார்கள் என்றோ கூறு­வது முற்­றிலும் தவ­றான கருத்­தாகும் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதே­போன்றே இந்தக் கட்­சி­களின் ஒன்­றி­ணைவு தொடர்பில் கடற்­றொழில் அமைச்சர் இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சே­கரும் கருத்து கூறி­யி­ருந்தார். “எத்­தனைக் கூட்­ட­ணி­களை அமைத்­தாலும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தை அசைக்க முடி­யாது. தமிழ், முஸ்லிம் கட்­சிகள் இணைந்து உரு­வாக்­கி­யுள்ள கூட்­டணி என்­பது வெறும் கூட்டு சாம்­பா­ராக மாறும். இந்தக் கூட்­ட­ணியில் கூடி­யி­ருக்­கின்ற தமிழ் கட்­சிகள் என்­றாலும் சரி, முஸ்லிம் கட்­சிகள் என்­றாலும் சரி அவர்­க­ளு­டைய பட்­டி­யலை திறந்து பாருங்கள். அனை­வரும் குற்­ற­வா­ளிகள். அனை­வ­ருமே இன்­றைக்கு தங்­க­ளு­டைய கடந்­த­கால வர­லாற்றின் ஊடாக குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்­ட­வர்­கள்தான். நீதி­மன்­றத்தால் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்டு இன்­றைக்கு பிணையில் இருக்­கின்­ற­வர்­கள்தான் அதி­க­மாக இருக்­கின்­றனர். அவ்­வாறு பிணையில் இருக்­கின்­ற­வர்­க­ளுக்கு நாளை கம்பி எண்­ணு­வது தவிர்க்க முடி­யா­த­தா­கி­விடும். அத­னால்தான், சிறைக்கு செல்­வ­தற்கு முதல் எதை­யா­வது செய்து இந்த அர­சாங்­கத்தை வீழ்த்­த­லாமா அல்­லது அர­சாங்­கத்தை மாற்­ற­லாமா என்ற முயற்­சியில் ஈடு­ப­டு­கின்ற ஒரு போக்­கா­கவே இதனை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது” என்றும் அமைச்சர் சந்­தி­ர­சேகர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இவ்­வாறு, தமிழ்ப்பேசும் கட்­சி­களின் ஒன்­றி­ணைவை அர­சாங்­க­மா­னது வெவ்­வேறு கோணங்­களில் விமர்­சித்து வரு­கின்­றது.

தற்­போ­தைய நிலையில் தமிழ்ப்பேசும் மக்கள் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். வடக்கு, கிழக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும் என்று தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தது.

இதே­போன்று இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதன் மூலம் இதற்­கான செயற்­பாடு மேற்­கொள்­ளப்­படும் எனவும் அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

ஆட்­சிக்கு வந்து ஒரு வருட காலத்­துக்குள் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­துவோம் என்றும் தேசிய மக்கள் சக்தி கூறி­யி­ருந்­தது. தற்­போது இந்தக் கட்­சி ஆட்­சிக்கு வந்து இரண்டு வரு­டங்­க­ளா­கின்ற போதிலும் தமிழ்ப்பேசும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு இன்­னமும் தீர்வு காணப்­ப­ட­வில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சியை முன்­னெ­டுப்­பது தொடர்­பிலோ அர­சியல் தீர்வு குறித்தோ பேசு­வ­தற்கு தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் தயா­ராக இல்லை.

இந்த நிலை­மையில் தமிழ், முஸ்லிம் மக்­களின் பொது­வான பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யாடி பொது­வான நிலைப்­பாட்டை எட்­டு­வ­தற்­கான களத்­தினை 6 தமிழ்ப் பேசும் கட்­சிகள் உரு­வாக்­கி­யுள்­ளமை வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டே­யாகும்.

நாட்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்­டு­மானால் சிறு­பான்­மை­யின மக்­க­ளான தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே இந்த விட­யத்தில் இணக்­கப்­பாடு ஏற்­பட வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும்.

வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையே அர­சியல் தீர்வு விட­யத்தில் ஒற்­றுமை என்­பது அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும்.

இனிமேல் அங்கு இரு இனங்­களும் இணைந்து வாழ வேண்­டிய சூழல் காணப்­ப­டு­கின்­றது. இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு என்று வரும் போது தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே இணக்கப்­பாடு என்­பது தேவை­யா­ன­தாகும்.  தந்தை செல்வா காலத்­தி­லி­ருந்து முஸ்லிம் மக்­களின் உரி­மை­களும் நிலை­நாட்­டப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை தமிழ்த் தலை­வர்கள் வலி­யு­றுத்­தியே வந்­தி­ருக்­கின்­றனர். மூன்று தசாப்­த­கால யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே திட்­ட­மிட்ட வகையில் முரண்­பா­டுகள் வளர்க்­கப்­பட்­டன. தற்­போதும் கூட கிழக்கு மாகா­ணத்தில் காணிப் பிரச்­சினை, எல்லைப் பிரச்­சினை என்று பல்­வேறு பிரச்­சி­னைகள் இரு சமூ­கங்­க­ளி­டை­யேயும் காணப்­ப­டு­கின்­றன.

இவற்­றுக்­கெல்லாம் தீர்வு காண வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. தமிழ்ப்பேசும் கட்­சி­களின் தலை­மைகள் தற்­போது பொது­வான விட­யங்­களில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முன்­வந்­துள்­ளமை இத்­த­கைய பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­ப­தற்கு முன்­னேற்­பா­டாக நிச்­ச­ய­மாக அமையும்.

அதே­போன்று அர­சியல் தீர்வு, புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்கம், மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்துதல் போன்ற விட­யங்­களில்  இந்த தமிழ்ப் பேசும் அர­சியல் கட்­சி­யினர் உந்து சக்­தி­யுடன் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வது சிறு­பான்மை மக்­க­ளுக்கு ஏதோ­வொரு வகையில் நன்­மை­யா­கவே அமையும்.

மலை­யக மக்­க­ளது பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் வெளிக்­கொண்­டு­வந்து அவற்­றுக்­கான தீர்­வு­களை தேடு­வ­தற்கு இந்த கூட்டணி நல்லதொரு சந்தர்ப்பமாகவே அமையும்.

தற்போதைய நிலையில் வடக்கு, கிழக்கு மலையகத்தைப் பொறுத்தவரையில் சிங்கள, பெளத்த பேரினவாதிகளின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் அத்தகைய செயற்பாட்டில் ஈடுபடுகின்றமை வரலாறாகவே மாறியிருக்கின்றது. எனவே, அத்தகைய ஆதிக்கக் கட்டுப் பாடுகளை தகர்ந்தெறிய வேண்டுமானால் தமிழ்ப் பேசும் கட்சிகளின் தலைவர்கள் ஒருமித்து ஓரணியில் செயற்பட வேண்டும்.தற்போது உடன்பாடு கண்டுள்ள 6 கட்சிகளுடன் ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெற வேண்டியது அவசியமாகவுள்ளது.

மொத்தத்தில், தமிழ்ப் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு என்பது தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை ஈடேற்றுவதற்கான கருப்பொருளாக அமைய வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்காதது...

2026-08-16 08:35:16
news-image

இந்தியாவின் வலியுறுத்தலும் இலங்கையின் யதார்த்த நிலையும்

2026-08-09 15:54:39
news-image

அரசியல் தீர்வு குறித்த சசி தரூரின்...

2026-08-02 10:05:20
news-image

கறுப்பு ஜூலை கலவரமும் எடுக்க வேண்டிய...

2026-07-26 15:26:43
news-image

தமிழ்ப் பேசும் கட்சிகளின் உடன்பாடு வரவேற்கத்தக்கது

2026-07-19 12:18:55
news-image

தமிழகக் கட்சிகளை ஓரணியில் திரட்ட முன்னர்...

2026-07-12 10:38:29
news-image

அரசியல் தீர்வு விவகாரத்தில் ஒன்றிணைந்த செயற்பாடு...

2026-07-05 10:20:30
news-image

செம்­மணி மனித புதை­குழி விவ­கா­ரத்தில் உண்­மைகள்...

2026-06-28 12:11:15
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு

2026-06-21 14:25:13
news-image

பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர் முன்னேற்றம் அவசியம்

2026-06-15 09:40:38
news-image

அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பது இந்தியாவின் தார்மீகக்...

2026-06-07 14:13:43
news-image

மாகாண சபைத் தேர்தல் விட­யத்தில் பெரும்...

2026-05-31 12:51:21