நீதியரசர்களின் ஓய்வு வயது நீடிப்புக்கு எதிர்ப்பு ; அரசாங்கத்திற்கு எதிராக களம் இறங்கும் எதிர்க்கட்சிகள் ; வியாழக்கிழமை கொழும்பில் அவசர கூட்டம்

Published By: Digital Desk 3

19 Jul, 2026 | 10:59 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

தலைமை நீதியரசர் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக, பாரிய அரசியல் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கமைய, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத அனைத்து எதிர்க்கட்சிகளினதும் அவசரக் கூட்டமொன்றை எதிர்வரும் வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானமானது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் சிவில் மற்றும் அரசியல் ரீதியான பாரிய அழுத்தங்களை உருவாக்குவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இக்கூட்டத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பை விடுக்கும் நோக்கில், கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தனித்தனியாகத் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராகக் கூட்டுப் போராட்டமொன்றை முன்னெடுப்பதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்த அழைப்பிற்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட மற்றும் அதற்கு வெளியேயுள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சாதகமான பதிலை வழங்கியுள்ளதுடன், இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுக்காலத்தை நீடிப்பதற்கான அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே நாட்டின் சட்டத்துறையினர் மற்றும் சர்வதேச அமைப்புகள் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, இலங்கை நீதிச்சேவை சங்கம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய உள்நாட்டு அமைப்புகளுடன் இணைந்து, ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய சர்வதேச அமைப்புகளும் அரசாங்கத்தின் இந்த முயற்சிக்குத் தமது பகிரங்க எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. நீதித்துறையின் உயர் பதவிகளில் இவ்வாறான தன்னிச்சையான வயதெல்லை மாற்றங்களை மேற்கொள்வது, நீதித்துறை மீதான அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும் என இத்துறையைச் சார்ந்த வல்லுநர்கள் எச்சரித்து வரும் பின்னணியில், இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய...

2026-08-16 15:07:47
news-image

சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயமாகக்...

2026-08-16 14:49:14
news-image

ஐ.நா விசேட தூதுவரின் அறிக்கைக்கு விரைவில்...

2026-08-16 15:15:21
news-image

சட்டத்தரணிகள் சங்கத்தை ஒடுக்கவே ஜனாதிபதி முயற்சித்தார்...

2026-08-16 14:50:38
news-image

நீதிபதிகளின் வயதை அதிகரிக்கும் போர்வையில் தமக்கு...

2026-08-16 17:16:24
news-image

கண்டி மக்களிடம் மீண்டும் செல்ல முடியாத...

2026-08-16 17:25:01
news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13