தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் 800-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.10 மணியளவில், பெங்சுய் மாவட்டம் ( Pengshui County ) இல் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக சீன அரசின் ஊடகமான CCTV வெளியிட்ட தகவலின்படி, மண் மற்றும் பாறைகள் சரிந்து குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளை சூழ்ந்ததால் பலர் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மாவட்ட நிர்வாகத் தலைவர் ரென் சுஜியாங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இதுவரை 18 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 8 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 34 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறதாக குறிப்பிட்டார்.
CCTV வெளியிட்ட காட்சிகளில், மலை அடிவாரத்தில் அமைந்திருந்த வீதியின் ஒரு பகுதி முழுவதும் பாறைகள் மற்றும் மண் குவியல்களால் மூடப்பட்டிருப்பதுடன், நிலச்சரிவைத் தொடர்ந்து தூசி படலத்திற்குள் மக்கள் அச்சத்தில் அலறியடித்தபடி ஓடிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மிகவும் செங்குத்தான மற்றும் கணிக்க முடியாத நில அமைப்பைக் கொண்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மலைச்சரிவின் விளிம்புகளில் இன்னும் தளர்வான பாறைகள் காணப்படுவதால், மீட்புப் பணிகள் மிகுந்த அவதானத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக சீன அரசு 50 மில்லியன் யுவானை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கவும், மீட்புப் பணிகளை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என உரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சீன ஜனாதிபதி, நிலச்சரிவுக்கான காரணத்தை விரைவாகக் கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களைத் தடுக்க புவியியல் அபாயங்கள் மற்றும் சாத்தியமான ஆபத்துகளை முழுமையாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM