ஈரான் மீது அமெரிக்கா நேற்று வியாழக்கிழமை (16) இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஹர்முஸ்கன் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதல்களில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் மூன்று பாலங்கள், ஒரு ரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஈரான் கூறுகிறது.
இரான்ஷஹ்ரில் உள்ள விமான நிலையம் தாக்கப்பட்டதில், அதன் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்து மின் தடை ஏற்பட்டுள்ளது. கிஷ் தீவிலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அங்கும் சில பகுதிகளில் தற்காலிக மின் தடை ஏற்பட்டுள்ளது. .
"போர் விமானங்கள், வான்வழி ட்ரோன்கள் மற்றும் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட அமெரிக்கப் படைகள், ஈரானின் கடலோரக் கண்காணிப்பு மற்றும் வான் பாதுகாப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்பு மற்றும் கடல்சார் திறன்கள் போன்ற பல ஈரானிய இராணுவ இலக்குகளைத் துல்லியமான ஆயுதங்கள் மூலம் தாக்கிவிட்டன" என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் (சென்ட்கொம் - CENTCOM) தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலை தொடர்ந்து ஈரான் - அமெரிக்க போர் மேலும் தீவிரமாகியிருக்கிறது. இந்நிலையில், "மத்திய கிழக்கு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட அமெரிக்க சேவை உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் விழிப்புடனும் பலத்துடனும், தயாராகவும் உள்ளனர்" என்று சென்ட்கொம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் அமெரிக்கப் பொதுமக்களிடம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய முதன்மை நேரடி உரையில் போரில் தங்களுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் ஈரானில் பெரியளவில் வெற்றி பெற்று வருகிறோம், அந்த உழைப்பின் பலனை நீங்கள் மிக மிக விரைவில் காண்பீர்கள்" என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM