பேஸ்புக் நட்பில் அறிமுகமான யுவதி ஒருவரின் நிர்வாணப் படங்களை பெற்று அதனை பிரிதொருவரிடம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பை சேர்ந்த சந்தேக நபரொருவரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்கிஸை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதனையடுத்து கல்கிஸை பிரதம நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி அவரை எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி பேஸ்புக்கினூடாக சந்தேகநபரை அறிந்துகொண்ட ஹம்பாந்தோட்டையை சேர்ந்தவரும், தற்போது வெள்ளவத்தையை வசிப்பிடமாக கொண்டவருமான பெண்ணொருவர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக்கினூடாக சந்தேகநபர் தனக்கு அறிமுகமானதாகவும் காலப்போக்கில் தமது நட்பு காதலாக மாறியதாகவும் முறைப்பாட்டாளரான பெண் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது மனைவி சிங்கப்பூரில் தொழிலுக்கு சென்று உயிரிழந்ததாகவும் சந்தேகநபர் அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபர் தனது காதலியின் மூலமாக அவரது நிர்வாணப் புகைப்படங்களை மின்னஞ்சம் மூலமாக பெற்று சில நாட்களின் பின்னர் சந்தேகநபர் அப்பெண்ணுடனான காதல் தொடர்பை துண்டித்துள்ளார்.
தன்னுடனான தொடர்பை திடீரென துண்டித்தமைக்கான காரணத்தை ஆராய்ந்த போது தன்னிடமிருந்து பெற்றுக்கொண்ட நிர்வாணப் படத்தை சந்தேக நபர் பிரிதொருவருக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்ததாக அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM