கொழும்பு வடக்கு பகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த மக்களின் பார்வை நலனை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 400 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் சமூக சேவை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது.
கொட்டாஞ்சேனை ஸ்ரீ தீபதுராம விகாரையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு லயன்ஸ் கழகத்தின் கொழும்பு நகர பிரிவு உறுப்பினர்கள் பிரதான அனுசரணை வழங்கினர்.
நிகழ்வில் கயான் லக்மால் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அவர், பார்வைக் குறைபாடுகளை சரியான நேரத்தில் கண்டறிந்து தேவையான உதவிகளை வழங்குவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முக்கிய சமூகப் பணியாகும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், லயன்ஸ் கழகம் இன்டர்நெசனலின் 306 D5 மாவட்டத்தின் பல லயன்ஸ் கழக உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்று, பொதுமக்களுக்கு கண்ணாடிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சமூக சேவைத் திட்டத்தின் ஒருங்கிணைப்பை லயன் மனோகரன் மற்றும் லயன் ராஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்டனர்.
பார்வைக் குறைபாடுடைய வசதி குறைந்த மக்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்ட இந்த மனிதாபிமான முயற்சி, சமூக நலன் மற்றும் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் லயன்ஸ் கழகத்தின் தொடர்ச்சியான சேவைகளில் முக்கிய நிகழ்வாக அமைந்தது.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM