இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான ஜயநந்த வர்ணவீர தங்கியிருந்த பாணந்துறை தல்பிட்டியவில் அமைந்துள்ள விடுதி ஒன்றிலிருந்து அவருக்கு சொந்தமான சுமார் 8 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் எனபன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ்நிலையில்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள் இருவரை சந்திப்பதற்காக சில தினங்களுக்கு முன் குறித்த விடுதியில் தங்குவதற்காக வந்திருந்த 56 வயதான வர்ணவீர கடந்த முதலாம் திகதி அங்கு வந்திருந்த நிலையில் குறித்த விடுதியில் அவரது நண்பர்கள் இருவரும் வர்ணவீரவை தங்கவைத்து விடுதியிலிருந்து சென்றதன் பின்னர் அன்றைய தினம் இரவு 10.30 மணியளவில் நித்திரைக்கு சென்றதாக வர்ணவீர பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மறுநாள் அதிகாலை 5 மணியளவில் எழுந்து பார்த்தபோது அங்கிருந்த விடுதியின் ஊழியரொருவர் அறையின் ஜன்னல் திறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதனையடுத்து அறையை சோதனையிட்ட போது முதல் நாள் நித்திரைக்கு செல்ல முன்னர் அறையிலுள்ள கண்ணாடி மேசையின் மீது துணியொன்றில் சுற்றியவாறு கழற்றி வைத்திருந்த தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கைச்சங்கிலி மற்றும் பணம் என்பன திருட்டுப் போயுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் வர்ணவீர இதே விடுதியில் தங்கியிருந்த சந்தர்ப்பமொன்றில் அவரது 35 000 ரூபா பெறுமதியான ஆபரணங்களும் இவ்வாறு திருட்டுப்போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ தினத்தன்று குறித்த விடுதியில் 5 பணியாளர்கள் மாத்திரமே சேவையில் இருந்ததாகவும் விடுதியின் சீ.சீ.ரி.வி. கெமராக்கள் வேறு திசைநோக்கி திருப்பப்பட்டு காணப்பட்டன என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தல்பிட்டியவில் அமைந்துள்ள இந்த விடுதியில் அடிக்கடி இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அண்மைய காலங்களில் அங்கு தங்கியிருந்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகளது பல இலட்சம் பெறுமதியான உடைமைகளும் இவ்வாறே திருட்டுப் போயுள்ளதாகவும் பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விடுதியின் ஊழியர்கள் மற்றும் முகாமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் மைகளும் இவ்வாறே திருட்டுப் போயுள்ளதாகவும் பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விடுதியின் ஊழியர்கள் மற்றும் முகாமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM