கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

Published By: Digital Desk 3

16 Jul, 2026 | 03:50 PM
image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (16) வியாழக்கிழமை பகல் 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட திறன்  விருத்தி மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன்  சிவஞானம் ஸ்ரீதரன்  அர்ச்சனா இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கிளிச்சி மாவட்டத்தில் கடந்த  2025 ஆம் ஆண்டு திருவையாறு பகுதியில்  விவசாய அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிறுதாணிய மற்றும் நிலக்கடலை உற்பத்தி  அபிவிருத்தி திட்டம் கைவிடப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனாவால் கேள்வி எழுப்பப்பட்டமை  

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஆற்றொதுக்கு காணியை ஆக்கிரமிப்பு செய்து  தனது வீட்டுக்குச் செல்லும் வீதிக்கு 3.5 மில்லியன் அரச நிதியில் பாலம்  அமைத்துள்ளமை தொடர்பாகவும் இதற்கு  அதிகாரிகள் துணைபோயுள்ளதாகவும் உயர் அதிகாரிகளும் மாவட்டத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு உடந்தையாக இருப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்ட அர்ச்சனா இராமநாதன் அவர்களால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து  குழப்பம் ஏற்பட்டதால்  குறித்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டு போலீசார் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறியுள்ளார் அத்துடன் அரச அதிகாரிகளும் இக் கூட்டத்திலிருந்து வெளியேறி இருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50