ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

Published By: Digital Desk 3

16 Jul, 2026 | 02:45 PM
image

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம், தற்காலிக நிலைய அதிபர் ஒருவரின் நியமனத்துடன் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையத்தில் கடமையாற்றி வந்த உப-நிலைய அதிபர் இராஜினாமா செய்ததை அடுத்து, புகையிரத திணைக்களம் அண்மையில் இந்நிலையத்தை தற்காலிகமாக மூடத் தீர்மானித்திருந்தது. தற்போது அங்கு தற்காலிக நிலைய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு, பயணியர் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்த அக்குரல மற்றும் அன்ததொல ஆகிய புகையிரத உப-நிலையங்களின் சேவைகளும் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்படவுள்ளன. இன்றைய தினம் அல்லது நாளைய தினத்திற்குள் தற்காலிக நிலைய அதிபர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டு பொதுமக்கள் சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

இந்த தற்காலிக நியமனங்கள் குறித்து புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர சில முக்கிய விபரங்களை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் 25 உப-நிலையங்களுக்கு புதிய உப-நிலைய அதிபர்களை நியமிப்பதற்காக கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது. எனினும், ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையிலும் இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை இதுவரை நிறைவடையவில்லை.

திணைக்களத்தின் உயர் நிர்வாகத்தின் திறமையின்மை காரணமாகவே இந்த நியமனங்கள் தாமதமாகி வருகின்றன. இதன் விளைவாக, தற்போது பணியில் உள்ள நிலைய அதிபர்களைக் கொண்டு கூடுதல் செலவில் இந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41
news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58