எல் நினோ தாக்கத்தால் வறட்சி அதிகரிக்கும் : நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தல்!

Published By: Digital Desk 3

16 Jul, 2026 | 01:09 PM
image

எதிர்பார்க்கப்படும் எல் நினோ காலநிலை மாற்றத்தினால் நாட்டில் வறட்சி மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், விவசாயப் பயன்பாட்டிற்கான நீரையும் குடிநீரையும் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிவித்துள்ளது.

நீர் முகாமத்துவம் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் திணைக்களத்தின் நீர் முகாமத்துவப் பிரிவின் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளதாவது, 

நாட்டின் 80 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்ச் சேமிப்பு தற்போது சுமார் 48 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. தற்போதுள்ள நீரானது தற்போதைய யால பயிர்ச்செய்கை பருவத்திற்குப் போதுமானதாக இருக்கும்.

எனினும், வறட்சியான காலநிலை நீடித்து, வரவிருக்கும் பெரும்போக பயிர்ச்செய்கை பருவத்தைப் பாதித்தால், முன்னுரிமை அடிப்படையில் தண்ணீரை விநியோகிப்பதற்காக விசேட நீர் முகாமைத்துவத் திட்டங்களை அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.

வறட்சியின் தாக்கத்தைக் குறைக்க நீர்ப்பாசனத் திணைக்களம் குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, வறண்ட வலயத்தில் உள்ள பாரம்பரிய “எல்லங்கா குளக் கட்டமைப்புகளைபுனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உபரி நீரை வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்குத் திருப்பிவிடுவதற்கான வடமத்திய மாகாண கால்வாய் திட்டப் பணிகள் தொடர்கின்றன.

நீர் வீணாவதைத் தடுக்க நீர்ப்பாசனக் கால்வாய்களுக்கான தானியங்கி கதவுக் கட்டமைப்புகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை உடனுக்குடன் கண்காணிக்கும் சென்சார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

களனி, களு, ஜின், நில்வளவை மற்றும் மல்வத்து உள்ளிட்ட முக்கிய ஆற்றுப்படுகைகளின் நீர்மட்டம் தற்போது சாதாரண மட்டத்திலேயே காணப்படுகிறது. உடனடி வெள்ளப் பெருக்கு அபாயம் எதுவும் இல்லை.

எனினும், வறண்ட காலநிலை தொடர்ந்தால் ஆறுகளின் நீர்மட்டம் மிக வேகமாக வீழ்ச்சியடையக்கூடும்.

விவசாயப் பணிகளை மிகவும் அவதானமாகத் திட்டமிடுமாறும், குறைந்த அளவு நீர் தேவைப்படும் மாற்றுப் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளுமாறும் விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ஏற்கனவே எச்சரிக்கையான நிலையை எட்டியுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கி, பொறுப்புடன் தண்ணீரைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய...

2026-08-16 15:07:47
news-image

சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயமாகக்...

2026-08-16 14:49:14
news-image

ஐ.நா விசேட தூதுவரின் அறிக்கைக்கு விரைவில்...

2026-08-16 15:15:21
news-image

சட்டத்தரணிகள் சங்கத்தை ஒடுக்கவே ஜனாதிபதி முயற்சித்தார்...

2026-08-16 14:50:38
news-image

நீதிபதிகளின் வயதை அதிகரிக்கும் போர்வையில் தமக்கு...

2026-08-16 17:16:24
news-image

கண்டி மக்களிடம் மீண்டும் செல்ல முடியாத...

2026-08-16 17:25:01
news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13