இலங்­கையில் அதி­வேக ரயில் பாதை­களை அமைக்க முடி­யாதா.?

Published By: Priyatharshan

05 Oct, 2017 | 11:04 AM
image

அதி­வேக புகை­யி­ரத பாதைகள் வெளி­நா­டு­களில் காணப்­பட்­டாலும் இலங்­கையின் புகை­யி­ரத பாதை­க­ளை குறுக்­கிட்டு பல சிறிய வீதிகள் இருப்­ப­தனால் எமது நாட்டில் அதி­வேக புகை­யி­ரத பாதைகளை நிர்மாணிக்க முடி­யாது என போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு  நூறு வரு­டங்கள் பூர்த்­தி­யா­வ ­தனை முன்­னிட்டு கோட்டை புகை­யிரத நிலை­யத்­தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பய­ணச்­சீட்டு விநி­யோகத்தளம், பய­ணி­க­ளுக்­கான புதிய பாலம், பெஸ்­டியன் மாவத்­தையில் இருந்தான நுழை­வாயில் ஆகி­ய­வற்றை போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமானத் துறை அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா திறந்து வைத்தார். மேலும் இதனை முன்­னிட்டு விசேட முத்­தி­ரை­யும் வெளி­யி­டப்­பட்­டது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இந்த நிகழ்­விற்கு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் வருகை தந்­தி­ருந்தார். கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலையத்­திற்கு நூறு வரு­டங்கள் பூர்த்­தி­யா­­வ­தனை முன்­னிட்டு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மினால் விசேட முத்­தி­ரையும் வெளி­யி­டப்­பட்­டது. 

போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா இங்கு உரை­யாற்­று­கையில், நாட்டின் புகை­யி­ரத சேவையை தர­மிக்­க­தாக மாற்ற முடி­யா­மைக்கு தொழிற்­சங்­கங்­க­ளுக்கு இடையில் காணப்­படும் அதி­கார போட்­டியே பிர­தான கார­ண­மாகும். இதனை தவிர்த்துக் கொண்டால் நிச்­ச­ய­மாக தர­மிக்க புகை­யி­ரத சேவையைமக்­க­ளுக்கு வழங்க முடியும். 

அத்­துடன் தற்­போது அனைத்து நாடுக­ளிலும் அதி­வேக புகை­யி­ரத சேவைகள்ஸ்தாபிக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் இலங்­கையில் அதி­வேக புகை­யி­ரத பாதை­களை நிர்­மாணிக்க முடி­யாது. ஏனெனில் புகை­யி­ரத பாதையை குறுக்­கிட்டு பல சிறிய வீதிகள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே இலங்­கையில் புகை­யி­ர­தங்­க­ளுக்கு அதி வேகமாக பய­ணிக்க முடி­யாது.

எனினும் வெளி­நா­டு­களில் காணப்படும் புதிய தொழில்­நுட்­பத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள் ளோம். குறிப்பாக ஜி.பி.எஸ். முறைமையிலான சமிக்ஞை திட்டம், பயணச்சீட்டு களை இலத்திரனியல் முறைமையில் வழங்குதல் போன்ற காரியங்கள் முன்னெடுக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58