மியன்மாரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட நீண்ட கால போராட்டத்திற்காக 1997 ஆம் ஆண்டு தன்னால் வழங்கப்பட்ட கௌரவ ஒக்ஸ்போர்ட் சுதந்திர பட்டத்தை பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் நகர சபை பறிமுதல் செய்துள்ளது.
அவர் அந்தப் பட்டத்தை இனிமேலும் பெற்றிருப்பது சரியானதல்ல என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. ஆங் சான் சூகியின் கௌரவ பட்டத்தை பறிமுதல் செய்வதற்கு தான் ஆதரவளித்துள்ளதை ஒக்ஸ்போர்ட் நகர சபையின் தலைவர் பொப் பிறைஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
மியன்மாரின் ராகைன் பிராந்தியத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளால் அந்தப் பிராந்தியத்தைச்சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து அயல் நாடான பங்களாதேஷை தஞ்சமடைந்துள்ள நிலையில் ஆங் சான் சூகி அது தொடர்பில் பாராமுகமாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி பொலிஸ் நிலையங்கள் மீது ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து அங்கு வன்முறை கள் கிளர்ந்தெழுந்தன. ஆங் சான் சூகி மியன்மாரை இராணுவ சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுவிக்கும் போராட்டத்தில் பல வருடங்களை வீட்டுக் காவலில் கழித்தவராவார்.
தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் அவரது கட்சி பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் ராகைன் பிராந்தியத்தில் ரோஹி ங்யா இன மக்களுக்கு எதிராக இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகளை தடுத்து நிறுத்தத் தவறியமை காரணமாக அவர் சர்வதேச ரீதியான கண்டனத்துக்குள்ளாகியுள்ளார்.
ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் ஆங் சான் சூகி நடவடிக்கை எதனையும் எடுக்க முயற் சிக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏனைய அமைப்புகளும் அவருக்கு தம்மால் வழங்கப்பட் டுள்ள கௌரவ பட்டங்களை வாபஸ் பெறுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப் படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM