நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழியுங்கள் - எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

15 Jul, 2026 | 03:17 PM
image

(எம்.மனோசித்ரா)

நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அழுத்தம் கொடுத்து ஜனநாயகத்தைச் சீர்குலைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமாயின் நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை ஆகிய மூன்றுமே ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பிரதான தூண்களாகும். இதில் நீதித்துறை தனித்துவமானதொரு பங்கை ஆற்றுகின்ற அதேவேளை, சுதந்திர ஊடகங்களும் சிவில் சமூகப் பிரஜைகளும் ஜனநாயகத்தின் ஏனைய இரு முக்கிய தூண்களாகக் காணப்படுகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், தற்போதைய அரசாங்கம் நீதித்துறைக்குத் தொடர்ச்சியாக அழுத்தங்களை வழங்கி வருகிறது. உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கும், நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான வெற்றிடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்பதற்கும் அரசாங்கம் முனைகிறது.

இதன் மூலம் நீதிபதிகளின் சுதந்திரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த அருவருக்கத்தக்க முயற்சியைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அதனை நிராகரிக்கவும் செய்கிறோம்.

உயர் நீதிமன்றங்களின் நீதிபதி வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதே நீதித்துறைக்கு விடுக்கப்படும் மறைமுக அழுத்தமாகும். நாட்டில் நீதியை நிலைநாட்டும் செயல்முறை, சட்டத்தின் ஆட்சி மற்றும் நியாயத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்கும் கொள்கைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் முற்போக்கு எதிர்க்கட்சிகள் எப்போதும் தயாராகவே உள்ளன.

எனவே, ஜனநாயகத்திலும் நீதித்துறையிலும் கை வைக்காமல், ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிக்கும் புதிய அரசியலமைப்பை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும்.

நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்காமல், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணையை வழங்கியுள்ளனர். இந்த மக்கள் ஆணையைத் தட்டிக்கழிப்பது மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் மிக மோசமான செயலாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41
news-image

மசகு எண்ணெய் விலை 80 டொலரில்...

2026-08-18 13:46:17
news-image

நாட்டை பிளவுபடுத்தும் 22ஆவது திருத்தம் ;...

2026-08-18 19:10:50