மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தனது பதவி விலகல் கடிதத்திற்கு இதுவரை ஜனாதிபதியிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என பேராசிரியர் அபயகோன் தெரிவித்துள்ளார்.
இந்த பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்து ஜனாதிபதி இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே இந்த பதவி விலகல் தீர்மானத்தை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆளுநராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், பேராசிரியர் சரத் அபேகோன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியை வகித்து வந்த மஞ்சுள மதஹபொல அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பதவியும் தற்போது வெற்றிடமாகியுள்ளது.
இந்தத் தற்காலிக வெற்றிடத்திற்கு நிரந்தர நியமனம் ஒன்று வழங்கப்படும் வரை, மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக்க தற்காலிகமாக அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM