‘தந்தை அமீர்’ ஷேக் ஹமத் மறைவு: கட்டார் தூதரகத்தில் றிஷாட் பதியுதீன் அனுதாபப் பதிவு!

Published By: Vishnu

15 Jul, 2026 | 06:29 AM
image

கட்டார் நாட்டின் முன்னாள் அரசரும், ‘தந்தை அமீர்’ என அழைக்கப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவையொட்டி, இலங்கையிலுள்ள கட்டார் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபக் குறிப்பேட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கையொப்பமிட்டு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இதன்போது, தந்தை அமீரின் ஆட்சிக் காலத்தில் இலங்கை - கட்டார் இருதரப்பு உறவுகளின் ஊடாக இலங்கைக்குக் கிடைக்கப்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவர் வழங்கிய பல்வேறு ஒத்துழைப்புக்களையும் றிஷாட் பதியுதீன் நன்றியுடன் நினைவுகூர்ந்த அவர் இது தொடர்பில் இலங்கைக்கான கட்டார் நாட்டின் தூதுவரிடமும் அனுதாபங்களை தெரிவித்தார்.

1995ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை கட்டாரை ஆட்சி செய்த ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, கத்தாரின் வளர்ச்சி மற்றும் உலகளாவிய முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய தலைவராக விளங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான மீள்குடியேற்ற உதவிகள்...

2026-08-19 15:11:21
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41
news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42