நீர்கொழும்பு சிறை மோதல்: சிறை அதிகாரிக்கு சுரேஷின் கொலை மிரட்டலே காரணம், மோதல் குறித்து CID விளக்கம்

Published By: Vishnu

15 Jul, 2026 | 06:22 AM
image

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல், தமக்கு உடற்பயிற்சி செய்வதற்கு போதிய நேரம் இல்லை எனக் கூறி கட்டுவெல்லேகம சுரேஷ் எனும் கைதி, சிறைச்சாலை அதிகாரி ஒருவரை கொலை செய்ய மிரட்டி குழப்பமாக நடந்துகொண்டதன் காரணமாகவே ஆரம்பமானதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (14) நீதிமன்றில் விடயங்களை சமர்ப்பித்தது.

இந்த மோதல் கடந்த 05 மற்றும் 06 ஆகிய திகதிகளில் இடம்பெற்றதுடன், இதில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 09 விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றிற்கு அறிவித்தது.

இந்த சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 89 பொலிஸ் அதிகாரிகள் கொழும்பிலிருந்து நீர்கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58
news-image

சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்ததும்,...

2026-08-19 16:32:02
news-image

கடும் வெப்பம் : நீண்ட நேரம்...

2026-08-19 17:11:35
news-image

வடகிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் நோக்கில் மகாவலி...

2026-08-19 17:12:34