எம்பிலிப்பிட்டிய பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படும், குறித்த தம்பதியினரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரலவெல்கடுவ பகுதியில் நேற்று முன்தினம் (13) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தம்பதியினர் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். கிரலவெல்கடுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய தாயும், 58 வயதுடைய தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 13 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபர் தனது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 26 வயதுடைய சந்தேகநபரான தம்பதியினரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM