நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரருக்கு  பதவி உயர்வு

Published By: Digital Desk 3

14 Jul, 2026 | 04:47 PM
image

கின்னியா பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யச் சென்றபோது ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின்  சார்ஜன்ட்டுக்கு  உப பொலிஸ் பரிசோதகர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் கந்தளாய் முகாமில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் (67763) டி.பி. ரணசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் திகதி கின்னியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோரை கைதுசெய்ய சென்றிருந்தார். இதன்போது மஹாவலி கங்கையின் நீர்ரோட்டத்தில் சிக்கி அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கடமையின் போது விபத்தில் உயிரிழந்த குறித்த அதிகாரியின் சேவையைப் பாராட்டி, அரச நிர்வாக சுற்றறிக்கைகளுக்கு அமைவாக பொலிஸ் மா அதிபரால் இந்த விசேட பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 12 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து  உப பொலிஸ் பரிசோதகர்  பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58
news-image

சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்ததும்,...

2026-08-19 16:32:02
news-image

கடும் வெப்பம் : நீண்ட நேரம்...

2026-08-19 17:11:35
news-image

வடகிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் நோக்கில் மகாவலி...

2026-08-19 17:12:34