வத்தளையில் இனந்தெரியாத சடலம் கண்டுபிடிப்பு : புகையிரதத்திலிருந்து விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்!

14 Jul, 2026 | 01:34 PM
image

வத்தளை, ஹுனுப்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள புதர் காடொன்றிலிருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் நேற்று (13) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், இந்த முடிவு சுமார் 3 நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த தடயவியல் சோதனை அதிகாரிகள் (SOCO) முதற்கட்ட விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து, நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58
news-image

சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்ததும்,...

2026-08-19 16:32:02