ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான 2 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணித்தபோது, ஈரான் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததோடு 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை ஈரானின் 2 ஏவுகணைகள் இக்கப்பல்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்ட தகவலின்படி, மொம்பாசா (Mombasa), அல் பாஹியா (Bahiya) ஆகிய சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையின் தெற்கு பகுதியில் ஓமன் கடற்பரப்பின் வழியே இந்தக் கப்பல்கள் கடந்து சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நடத்தப்பட்ட தாக்குதலில் மொம்பாசா கப்பலில் இருந்த இந்தியரே உயிரிழந்ததாகவும் மேலும், 6 இந்தியர்கள், 2 உக்ரைன் நாட்டினர் என 8 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் தாக்குதலில் கப்பல்களுக்கும் பாரியளவில் சேதமடைந்துள்ளதால் ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சர்வதேச சட்ட விதிமீறலில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்க அமீரகத்துக்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM