மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19 முதலீட்டாளர்கள் ஆர்வம் !

Published By: Digital Desk 3

14 Jul, 2026 | 11:31 AM
image

(சரண்யா பிரதாப்)

மத்தள ராஜபக்‌ஷ  சர்வதேச விமான நிலையத்தின் வளங்களை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 19 முதலீட்டு முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்தள விமான நிலையத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட விருப்பம் தெரிவிக்கும் கோரிக்கை நடைமுறையின் கீழ் இந்த முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த முதலீட்டாளர்களில் மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 9 ஆம் திகதி துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் முன்மொழிவுகள் திறக்கப்பட்டன.

விமான மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த EOI நடைமுறையின் மூலம், மத்தள விமான நிலையத்தில் சாத்தியமான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன.

அமைச்சின் தகவலின்படி, கிடைக்கப்பெற்ற முதலீட்டு முன்மொழிவுகள் இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படவுள்ளன.

விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் சிவில் விமான சேவைகள் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தக மற்றும் சேவை நடவடிக்கைகள் இதில் உள்ளடங்கும்.

இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கான தகுதிகள், அனுபவம் மற்றும் திறன்களை முதலீட்டாளர்கள் நிரூபிக்க வேண்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட திட்டக் குழு, தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, சாத்தியமான முதலீட்டாளர்களை தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்கள், அடுத்த கட்ட கொள்முதல் செயல்முறையான முன்மொழிவுகளுக்கான கோரிக்கை நடைமுறையில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.

முழுமையான முன்மொழிவுகளைத் தயாரித்து சமர்ப்பிக்க முதலீட்டாளர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கும் வகையில், EOI விண்ணப்ப காலக்கெடு ஜூலை 9 வரை நீட்டிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வர்த்தக செயற்பாடுகளை மேம்படுத்தி, அதன் நிதி நிலைமையை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த முதலீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையம் சுமார் 39.3 பில்லியன் ரூபாய் நிகர இழப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்...

2026-08-19 13:33:52
news-image

வைத்தியசாலை முஸ்லிம் பணியாளர்களின் ஆடை விவகாரம்...

2026-08-19 13:17:25
news-image

வைத்திய உதவியாளர்களின் ஆடை சர்ச்சை: இடமாற்றம்...

2026-08-19 12:42:08
news-image

சிறுபோக நெல் கொள்வனவு: சிறு மற்றும்...

2026-08-19 12:41:22
news-image

கோண்டாவில் பல்பொருள் அங்காடி கிளையின் வியாபார...

2026-08-19 12:26:09
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி...

2026-08-19 12:25:36
news-image

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில்...

2026-08-19 12:15:15
news-image

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

2026-08-19 12:14:45
news-image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல்களில்...

2026-08-19 11:47:23
news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24