(நெவில் அன்தனி)
காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (13) ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் செனுக்க வேக்குனாகொட குவித்த ஆட்டம் இழக்காத இரட்டைச் சதத்தின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி இன்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 344 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
துல்னித் சிகேரா (0), திமன்த மஹாவித்தான (2) ஆகிய இருவரும் முதல் 4 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்ததால் இலங்கை இளையோர் அணி பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (3 - 2 விக்.)

ஆனால், சேனுஜ வேக்குனாகொட மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் இரட்டைச் சதம் குவித்ததுடன் மூன்று இணைப்பாடடங்களில் பங்களிப்பு செய்து இலங்கை அணியை பலமான நிலையில் இட்டார்.
அணித் தலைவர் விமத் தின்சாரவுடன் 3ஆவது விக்கெட்டில் 143 ஓட்டங்களையும் உப தலைவர் கவிஜ கமகேவுடன் 4ஆவது விக்கெட்டில் 128 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகலவுடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களையும் சேனுஜ வேக்குனாகொட பகிர்ந்தார்.


227 பந்துகளை எதிர்கொண்ட சேனுஜ வேக்குனாகொட 31 பவுண்டறிகளுடன் ஆட்டம் இழக்காமல் 203 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
விமத் தின்சார 52 ஓட்டங்களையும் கவிஜ கமகே 49 ஓட்டங்களையும் பெற்றனர்.
சாமிக்க ஹீனட்டிகல 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்..
பந்துவீச்சில் காவிய பரேஷ் பட்டேல் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM