வவுனியா சாம்பல்தோட்டம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வரை வவுனியா நெளுக்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மன்னார் பகுதியிலிருந்து சூடுவந்தபுலவு நோக்கி பயணித்த நபர்களிடம் கேரள கஞ்சா இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி எ.எம்.எஸ்.அத்தநாயக்க தலமையிலான குழுவினர் குறித்த நபர் சாம்பல்தோட்டம் பகுதியில் வைத்து சோதனையிட்டபோது உடமையுடன் மறைத்து வைத்திருந்த கேரள கஞ்சா பொதியினை கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24,26,27 மற்றும் 39 வயதுடையவர்கள் எனவும் எங்கிருந்து இவர்கள் கஞ்சாவினை பெற்றுக்கொண்டார்கள் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா பொலிஸ் நிலையத்தினூடாக வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM