சபரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இரத்தினபுரி அறநெறி பாடசாலை ஒன்றியத்தின் பங்களிப்புடன் “உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்” என்ற விசேட விழிப்புணர்வுத் திட்டம் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே சிறுவயது முதலே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும், அதன் மூலம் அவர்களின் எதிர்கால உயர்கல்வித் தேவைகளைத் தடையின்றிப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இம்மாபெரும் முகாம்கள் பக்திப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.
இவ்விழிப்புணர்வுத் திட்டத்தின் கீழ் மாதம்பை – இந்துமாமன்றம் அறநெறி பாடசாலை ,ஹவுப்பை – திருச்சுடர் அறநெறி பாடசாலை, பொரனுவ – கலைஜோதி அறநெறி பாடசாலை, கஹவத்தை – துர்கா அறநெறி பாடசாலை, அவிசாவலை – குடாகம ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை மற்றும் சாய் சரணாலய அறநெறி பாடசாலை ஆகிய அறநெறிப் பாடசாலைகளில் விசேட நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
இந்நிகழ்வுகளின் போது, கலந்துகொண்ட மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர்களுக்குச் சேமிப்பு உண்டியல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இம்மாபெரும் விழிப்புணர்வு முகாம்களில் அந்தந்த அறநெறிப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM