நாட்டின் இருவேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்.
பேராதனை பகுதி
பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, பேராதனை நகருக்கு அருகில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்திச் சென்ற 28 வயதுடைய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 400 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், 150 கிராம் ஹெரோயினும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
வெரலபட -ஹின்னிஅப்புஹாமி மாவத்தை
வெரலபட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹின்னிஅப்புஹாமி மாவத்தையில் வெரலபட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 119 கிராம் 680 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM