அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகள் மீதான தனது தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியதையடுத்து, இன்று திங்கட்கிழமை (13) மசகு எண்ணெய் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக உலக சந்தை நிலைவரம் தெரிவிக்கிறது.
இந்த விலை அதிகரிப்பானது ஹோர்முஸ் நீரிணை வழியிலான எரிசக்தி போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 2.34 அமெரிக்க டொலராக (அல்லது 3.08%) உயர்ந்து, ஒரு பீப்பாய் எண்ணெய் 78.35 அமெரிக்க டொலராகியுள்ளது.
அதேவேளை அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் 2.21 அமெரிக்க டொலராக (அல்லது 3.09%) உயர்ந்து, ஒரு பீப்பாய் WTI எண்ணெய் 73.62 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
வார இறுதியில், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீதான தனது தாக்குதல்களைத் தெஹ்ரான் விரிவுபடுத்திய அதேவேளை, அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து தொடர்பாக அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடந்துவரும் தாக்குதல்களின் சமீபத்திய வடிவமாக இது பார்க்கப்படுகிறது.
அனுமதிக்கப்படாத பாதையில் பயணித்த கப்பல் ஒன்று தாக்கப்பட்டதையடுத்து, தாம் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக ஈரான் முன்னதாக அறிவித்திருந்தது. இருப்பினும், நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையானது வணிகப் போக்குவரத்துக்காகத் திறந்துதான் உள்ளது என்று கூறினார்.
ஆனாலும், நேற்று வெறும் 6 கப்பல்கள் மட்டுமே இந்த நீரிணையைக் கடந்து சென்றுள்ளன என்று 'கெப்லர்' (Kpler) நிறுவனத்தின் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
தீவிரமடைந்து வரும் இந்தத் தாக்குதல்கள், கடந்த மாதம் கையெழுத்தான அமெரிக்க- - ஈரான் இடைக்கால ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இந்த ஒப்பந்தமானது, நீரிணையை மீண்டும் திறப்பதையும், அடுத்த 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜூன் மாதத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் ஒரு நாளைக்கு 4.1 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்தது. இருப்பினும், இது போர் தொடங்குவதற்கு முந்தைய அளவை விட ஒரு நாளைக்கு 9.4 மில்லியன் பீப்பாய்கள் குறைவாகவே உள்ளது என்று சர்வதேச எரிசக்தி முகமை (IEA) வெள்ளிக்கிழமை (10) வெளியிட்ட தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ANZ ஆய்வாளர்கள் வெளியிட்ட குறிப்பில், "வார இறுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்தச் சமீபத்திய மோதல்களுக்கு மிக விரைவாகத் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தற்போது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஐஜி (IG) சந்தை ஆய்வாளர் டோனி சிகாக்காமோர் கூறுகையில், எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த மிதமான உயர்வு, தற்போதைய பதற்றத்தை ஒரு பலவீனமான போர்நிறுத்தத்துக்குள் ஏற்பட்ட தற்காலிக மோதலாகவே சந்தை பார்க்கிறது என்பதைக் காட்டுகிறது. இது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முழுமையான முறிவைக் குறிக்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், "இந்தக் கணிப்பு எவ்வளவு தூரம் துல்லியமானது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றும் அவர் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM