இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டில் 13,292 டெங்கு நோயாளர்கள் பதிவு 

Published By: Digital Desk 3

13 Jul, 2026 | 11:48 AM
image

நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி வரை நாட்டில் 68,071 டெங்கு வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் (ஜூலை 12 ) மேலும் 601 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால் இந்த ஆண்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,672 ஆக அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் 12 நாட்களில் மட்டும் 13,293 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை பதிவான மாதாந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஜூன் மாதமே மிக அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது. அந்த ஒரே மாதத்தில் மட்டும் 21,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலினால் நாடளாவிய ரீதியில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் ஒட்டுமொத்த டெங்கு பாதிப்பில் மிக உயர்ந்த எண்ணிக்கையை மேல் மாகாணம் பதிவு செய்துள்ளது. இமாகாணத்தில் இதுவரை 36,118 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே மிக அதிகமாக 14,112 நோயாளர்கள் கம்பஹாவில் பதிவாகியுள்ளனர்.

கம்பஹாவுக்கு அடுத்தபடியாகக் கொழும்பு மாவட்டத்தில் 13,791 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன.

தற்பொழுது நிலவி வரும் மழைக்கால வானிலையைக் கருத்தில் கொண்டு, வீடுகள், பாடசாலைகள் மற்றும் வேலைத்தலங்களைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கி டெங்கு உறைவிடங்கள் உருவாகாதவாறு தூய்மையாகப் பராமரிக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் உடனடியாக தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58
news-image

சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்ததும்,...

2026-08-19 16:32:02
news-image

கடும் வெப்பம் : நீண்ட நேரம்...

2026-08-19 17:11:35
news-image

வடகிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் நோக்கில் மகாவலி...

2026-08-19 17:12:34