தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல 'Rong Beer Na Lat Phrao' உணவகம் மற்றும் மதுபான விடுதியில் நள்ளிரவுக்குப் பிறகு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 63 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாடுச்சாக் மாவட்டத்தின் லட்ப்ராவ் பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதியில், மேடைக்கு அருகிலிருந்த மின் சர்க்யூட் பிரேக்கரில் ஏற்பட்ட கோளாறைத் தொடர்ந்து தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவசர வெளியேறும் வழியை அடைய முடியாமல் கழிவறையில் தஞ்சமடைந்த பலர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தாய்லாந்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM