(செ.கவிஷனா)
கொழும்பு கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தில் 30 மாணவர்களுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் திங்கட்கிழமை (13) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகம் ஞாயிற்றுக்கிழமை (12) மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக, மாணவர்களினதும் ஊழியர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அதன் வளாகத்தை முழுமையாகத் தூய்மைப்படுத்தும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை (12) நாள் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தினால் வழிநடத்தப்பட்ட இந்த விசேட வேலைத் திட்டத்தின் போது, கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக வளாகத்தை தூய்மைப்படுத்துதல், புகை விசிறல் மற்றும் நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை கண்டறிந்து அழித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தத் தூய்மைப்பணிப் பொதுநலச் சேவையில் கொழும்பு மாநகர சபையின் பொரள்ளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து கூட்டுப் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM