தங்காலை கடற்பகுதியில் மிதந்துக் கொண்டிருந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரது சடலம் சனிக்கிழமை (11) பொலிஸாரால் மீ்ட்கப்பட்டது.
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மிதப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் அளித்திருந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் தங்காலை, கொடெல்லவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞர் கடந்த 9 ஆம் திகதி தங்காலை, மாவெல்ல மஹகலாகாவ கடற்கரைப் பகுதியில் தூண்டில் ஒன்றின் உதவியுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே கடல் அலையில் சிக்கி அள்ளுண்டு செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காகப் பிரதேசவாசிகள், பொலிஸ் உயிர்பாதுகாப்பு பிரிவு மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்திருந்த போதிலும், குறித்த இளைஞரை தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் போயிருந்தது.
எனினும், மாவெல்ல கடற்பரப்பில் குறித்த இளைஞரின் சடலம் மிதந்து கொண்டிருப்பதை சனிக்கிழமை (11) பிற்பகல் வேளையில் அவதானித்த மீனவர்கள், அதனைப் படகொன்றின் மூலம் கரைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த விபத்து மற்றும் மரணம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM