தமிழகக் கட்சிகளை ஓரணியில் திரட்ட முன்னர் நாம் ஒன்றுபடுவோம்

12 Jul, 2026 | 10:38 AM
image

தமி­ழ­கத்­துக்கு விஜயம்  செய்­தி­ருந்த கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ்த் தேசிய பேர­வை­யினர்,  தமி­ழக முத­ல­மைச்சர்   ஜோசப் சி.  விஜய், தமி­ழக  எதிர்க்­கட்சித் தலைவர்  உத­ய­நிதி ஸ்டாலின் உட்­பட  பல தரப்­பி­ன­ரையும் சந்­தித்து  கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இந்த சந்­திப்­புக்­களின் போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான  அர­சியல் தீர்வின் அவ­சியம்  தொடர்­பிலும் தமிழ் மக்கள் மீதான   அடக்கு முறைகள், ஆக்­கி­ர­மிப்­புக்கள் குறித்தும்  தமிழ்த் தேசிய  பேர­வை­யினர் எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர்.

தமி­ழக முத­ல­மைச்சர்  ஜோசப் சி. விஜய்யை  சந்­தித்துப் பேசிய  தமிழ்த் தேசிய  பேர­வை­யினர்,  அவ­ரிடம் மகஜர் ஒன்­றையும்  கைய­ளித்­தி­ருந்­தனர்.  இந்த சந்­திப்பின் போது  இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் தமி­ழ­கத்தின் ஒரு­மித்த நிலைப்­பாட்டை உரு­வாக்கும் வகையில்  அனைத்துக் கட்சி மாநாட்டை  நடத்­து­வ­தற்­கான  முயற்­சி­களை  முன்­னெ­டுக்க வேண்டும் என்று  அவர்கள்  கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்­றனர்.

மேலும்,  தமி­ழர்­க­ளுக்­கான தீர்வின்  ஆரம்­பப்­புள்­ளி­யாக  13ஆம் திருத்தச் சட்டம்  இல்லை என்­ப­தையும் ஒற்­றை­யாட்சி  அர­சி­ய­ல­மைப்பை மீண்டும்  அமுல்­ப­டுத்­து­வ­தற்கு  எதி­ரா­கவும்  தமி­ழகம் இருக்­கின்­றது என்ற  ஒரு­மித்த நிலைப்­பாட்டை  இலங்கை அர­சாங்­கத்­துக்கும் இந்­திய மத்­திய அர­சாங்­கத்­துக்கும்  வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக இந்த  சர்­வ­கட்சி மாநாட்டு  முயற்சி  முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய  பேர­வை­யினர் முத­ல­மைச்சர் விஜய்­யிடம்  கேட்­டுக்­கொண்­டுள்­ளனர்.

இதே­போன்றே, தமி­ழக  எதிர்க்­கட்சித் தலைவர் உத­ய­நிதி ஸ்டாலி­னு­ட­னான சந்­திப்பின் போதும்  சகல கட்­சி­க­ளையும் ஒருங்­கி­ணைத்து இந்­திய மத்­திய அர­சாங்­கத்­துக்கு அழுத்­தத்தை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய பேர­வை­யினர்  வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

விடு­தலைச் சிறுத்­தைகள் அணியின் தலைவர் தொல் திரு­மா­வ­ளவன், தேசிய இயக்­கத்தின் தலைவர்  பழ. நெடு­மாறன் உட்­பட  பல தமி­ழகத் தலை­வர்­க­ளையும் இவர்கள் சந்­தித்து   இத்­த­கைய கோரிக்­கை­யினை முன்­வைத்­தி­ருக்­கின்­றனர்.

தமிழ்த் தேசிய  பேர­வை­யினர்  கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்­னரும் தமி­ழ­கத்­துக்கு விஜயம் செய்து அன்­றைய முத­ல­மைச்சர் மு.க. ஸ்டாலின் உட்­பட்ட  தலை­வர்­களை சந்­தித்து  கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர்.  தற்­போது தமி­ழக முத­ல­மைச்­ச­ராக ஜோசப் சி. விஜய்  பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து    மீண்டும் அங்கு விஜயம் செய்து முத­ல­மைச்சர் உள்­ளிட்­டோரை சந்­தித்து  இவர்கள் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கின்­றனர்.

இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில்  இந்­தி­யாவின்  பங்­க­ளிப்பு என்­பது  தவிர்க்­கப்­பட முடி­யா­த­தொன்­றாகும்.  அன்னை இந்­திரா காந்­தியின் காலம் தொட்டு,  இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் இந்­தியா  அக்­கறை செலுத்தி வரு­கின்­றது.

இதே­போன்றே  தமி­ழ­கமும்  இலங்கை  தமிழர் விவ­கா­ரத்தில்   அக்­கறை கொண்டே செயற்­பட்டு வரு­கின்­றது.  தொப்புள் கொடி உற­வு­க­ளான  தமி­ழக மக்கள்,   இலங்கை தமிழர் விவ­கா­ரத்தில் தீவிர அக்­கறை கொண்­ட­வர்­க­ளா­கவே செயற்­பட்டு வரு­கின்­றனர்.  தமி­ழ­கத்தை ஆட்சி செய்த  முன்னாள்  முதல­மைச்­சர்கள்  இலங்கைத்  தமிழர் விவ­கா­ரத்தில் பல்­வேறு தீர்­மா­னங்­க­ளையும்   சட்­ட­ச­பையில் நிறை­வேற்­றி­யி­ருக்­கின்­றனர்.

இந்­திய மத்­திய அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களை கொடுத்து  இலங்கைத் தமிழர் விவ­கா­ரத்தில் மத்­திய அரசை  செயற்­பட வைப்­பதில்  தமி­ழ­கத்தை சேர்ந்த  அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள்  முன்­னின்­றி­ருக்­கின்­றனர். 1980களில் வடக்கு, கிழக்கில்  தமிழ்  போரா­ளிக்­கு­ழுக்கள் உரு­வா­கி­ய­போது  அந்த உரு­வாக்­கத்­துக்கு  இந்­தியா   ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கி­யி­ருந்­தது. தமி­ழகம் உட்­பட இந்­தி­யாவின் பல பகு­தி­களில்  தமிழ்ப் போரா­ளி­க­ளுக்கு  பயிற்­சிகள்  வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

விடு­த­லைப்­பு­லிகள் உட்­பட சகல  தமிழ்  போரா­ளிக்­கு­ழுக்­களும்  இந்­தி­யாவில் பயிற்­சி­களைப் பெற்­றி­ருந்­தன.  இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் அர­சியல் தீர்­வொன்றின் அவ­சி­யத்­தையும் இந்­தியா தொடர்ச்­சி­யாக   வலி­யு­றுத்தி வந்­தது.

இதன் ஒரு கட்­ட­மா­கவே  திம்புப் பேச்­சு­வார்த்தை  இடம்­பெற்­றி­ருந்­தது. இலங்கை அர­சாங்கத் தரப்பும் போராளிக் குழுக்­களின் பிர­தி­நி­தி­களும்   இந்­தி­யாவின் மத்­தி­யஸ்­தத்தில்  இந்தப் பேச்­சு­வார்த்­தையில் பங்­கேற்­றி­ருந்­தன. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்­தி­ருந்த நிலை­யி­லேயே,   1987 ஆம் ஆண்டு இந்­தி­யா­வினால்  இலங்­கை–­இந்­திய ஒப்­பந்தம்  மேற்­கொள்­ளப்­பட்டு  13ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழான மாகா­ண­சபை முறைமை  அமுல்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­தி­யாவின் அழுத்தம் கார­ண­மாகவே இந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட அன்­றைய ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­தன  இணங்­கி­யி­ருந்தார்.  இவ்­வாறு,   இலங்கை  இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில்  இந்­தி­யா­வி­னதும்  தமி­ழ­கத்­தி­னதும் பங்­க­ளிப்பு    மறக்­கப்­பட முடி­யா­த­தொன்­றாகும்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்­டு ­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து  இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்ற  விட­யத்தில்  அன்­றைய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் அக்­கறை காண்­பிக்­க­வில்லை. அன்­றைய ஜனா­தி­பதி  மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்­த­ரப்­பினர் அர­சியல் தீர்வு குறித்து  ஆராய்­வ­தற்கு கூட  தயா­ராக இருக்­க­வில்லை.

இந்த நிலையில்   இந்­தி­யாவின் அழுத்தம் கார­ண­மாக  2011 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளுடன்  அர­சாங்­கத்­த­ரப்பு  கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டது.  அன்­றைய அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தலை­மை­யி­லான அர­சாங்கக்  குழு­வி­ன­ருக்கும் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கு­மி­டையில் 16 சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றி­ருந்­தன.

பல்­வேறு தீர்­மா­னங்கள் இந்த பேச்­சுக்­களின் போது  எடுக்­கப்­பட்ட போதிலும் அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த  அன்­றைய அர­சாங்கம் முய­ல­வில்லை.  மாறாக,  பேச்­சு­வார்த்­தை­யி­லி­ருந்து  அர­சாங்­கத்­த­ரப்­பினர்  வெளி­யே­றி­யி­ருந்­தனர்.  இதன் பின்னர்  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­க­மா­னது  அர­சியல் தீர்வு விட­யத்தில்  அக்­கறை செலுத்­தாது இழுத்­த­டித்தே வந்­தது.

பின்னர் நல்­லாட்சி அர­சாங்கக் காலத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி,   அதன் மூலம் அர­சியல் தீர்வைக் காண நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.  இந்த முயற்­சியும் இடை­ந­டுவில்  கைவி­டப்­பட்­டது.

இவ்­வா­றான நிலையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சி­யல்­தீர்வு தொடர்பில் இலங்­கைக்கு இந்­தியா  அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று  தமிழ்த் தேசியக் கட்­சி­களின் சார்பில் தொடர்ச்­சி­யாக   வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. 13 ஆவது திருத்த சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வதன் மூலம்  அர­சியல் தீர்வைக் காண வேண்டும்   என்­பதே இந்­தி­யாவின்  நிலைப்­பா­டாக இருக்­கின்­றது.

இந்த விடயம் தொடர்பில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில்  இந்­தியத் தலை­வர்­களும்  இந்­திய அதி­கா­ரி­களும்   எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்­றனர்.  இலங்­கைக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி விஜயம்  செய்த போதும் இந்த நிலைப்­பாடு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையின்  இலங்கை தொடர்­பான பிரே­ரணை மீதான விவா­தங்­களின் போதும்   இந்த நிலைப்­பாட்டை இந்­தியா   வலி­யு­றுத்தி வரு­கின்­றது.  ஆனாலும்    இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில்  தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கமும்  அக்­கறை செலுத்து­வ­தாக இல்லை.

அர­சியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசி­யக்­கட்­சி­க­ளுடன்  கலந்­து­ரை­யா­டல்­களை  நடத்­து­வது குறித்தோ  புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்­பிலோ அர­சாங்கம்  அக்­க­றை­யின்­றியே செயற்­ப­டு­கின்­றது.  இத்­த­கைய நிலையில் தமிழ்த் தேசிய  கட்­சி­க­ளா­வது தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்வுத் திட்­ட­வ­ரை­பொன்­றினை தயா­ரித்து,   அதன் மூலம் அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்  என்று தற்­போது வலி­யு­றுத்­தப்­பட்டு  வரு­கின்­றது.  

ஆனால், அர­சியல் தீர்வுத் திட்ட வரைபை  தயா­ரிக்கும் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளி­டையே ஒற்றுமை இன்றிய நிலைமை நீடித்து வருகின்றது.  இதற்கான முயற்சிகளை  சில தரப்பினர் மேற்கொண்ட போதிலும்  அந்த விடயத்தில்   இன்னமும்   இணக்கப்பாடு காணப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கட்சிகள்  இந்த விடயத்தில் ஒற்றுமைபடாத நிலையில் ஓரணியாக  திரண்டு திட்டவரைபொன்றை தயாரிக்க முடியாத சூழ்நிலையில்  தமிழ்த்  தேசிய  பேரவையினர்   தமிழகத்துக்கு சென்று  அங்குள்ள  கட்சிகளை  ஒன்றிணைத்து சர்வகட்சி மாநாட்டை  கூட்டுமாறு கோருவது  எந்தவகையில் பயனளிக்கும் என்ற கேள்வி  எழுகின்றது.

தமிழகக்  கட்சிகளின் ஒத்துழைப்பு எமக்கு  அவசியமானதுதான் அதில் மாற்றுக்கருத்துக்கு  இடமில்லை. ஆனால், முதலில் வடக்கு,  கிழக்கு தமிழ் தேசியக்கட்சிகள்  இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.   அத்தகைய நிலை ஏற்பட்ட பின்னரே தமிழகத்தின் கட்சிகளை  ஒன்றிணைக்க  கோருவது  பயன்தரும் என்பதை  சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்காதது...

2026-08-16 08:35:16
news-image

இந்தியாவின் வலியுறுத்தலும் இலங்கையின் யதார்த்த நிலையும்

2026-08-09 15:54:39
news-image

அரசியல் தீர்வு குறித்த சசி தரூரின்...

2026-08-02 10:05:20
news-image

கறுப்பு ஜூலை கலவரமும் எடுக்க வேண்டிய...

2026-07-26 15:26:43
news-image

தமிழ்ப் பேசும் கட்சிகளின் உடன்பாடு வரவேற்கத்தக்கது

2026-07-19 12:18:55
news-image

தமிழகக் கட்சிகளை ஓரணியில் திரட்ட முன்னர்...

2026-07-12 10:38:29
news-image

அரசியல் தீர்வு விவகாரத்தில் ஒன்றிணைந்த செயற்பாடு...

2026-07-05 10:20:30
news-image

செம்­மணி மனித புதை­குழி விவ­கா­ரத்தில் உண்­மைகள்...

2026-06-28 12:11:15
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு

2026-06-21 14:25:13
news-image

பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர் முன்னேற்றம் அவசியம்

2026-06-15 09:40:38
news-image

அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பது இந்தியாவின் தார்மீகக்...

2026-06-07 14:13:43
news-image

மாகாண சபைத் தேர்தல் விட­யத்தில் பெரும்...

2026-05-31 12:51:21