எம்மில் பலருக்கு எலும்பு பகுதிகளில் ஏற்படும் ஓஸ்டியோசர்கோமா எனப்படும் புற்றுநோய் பாதிப்பின் போது மூட்டு எலும்புகள் முழுவதுமாக அகற்றப்படாமல் இருப்பதற்காக லிம்ப் சால்வேஜ் சர்ஜேரி எனும் நவீன சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடுமையான காயங்கள், தொற்று பாதிப்பு, புற்றுநோய், கடுமையான கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரையின் அளவு காரணமாக கால்களில் ஏற்படும் பாதிப்பு, எலும்பு முறிவு.. போன்ற தருணங்களில் மூட்டுகளை முழுவதுமாக அகற்றாமல் உறுப்புகளை பாதுகாப்பதற்காக நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய லிம்ப் சால்வேஜ் சர்ஜேரி எனும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
கை, கால் ஆகிய உறுப்புகளில் ஓஸ்டியோசர்கோமா போன்ற பாதிப்பு ஏற்பட்டால்.. நோயாளியின் கை மற்றும் கால் உறுப்புகளை பாதுகாப்பதற்காக இத்தகைய சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் எலும்பு அல்லது மென்மையான திசுக்களில் உள்ள கட்டிகளை அகற்றுவதற்காகவும் இத்தகைய சத்திர சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் கை கால் உள்ளிட்ட எலும்பு பகுதிகளில் கட்டி பாதிப்பு வராமல் பாதுகாக்கப்படுகிறது.
மென் திசு பகுதிகளில் ஏற்படும் புற்று நோயை அகற்றுவதற்காகவும் இத்தகைய சத்திர சிகிச்சைகள் பலன் அளிக்கிறது. இத்தகைய சத்திர சிகிச்சை மேற்கொண்ட பிறகு ஆறு முதல் பன்னிரண்டு மாதங்களில் நல்லதொரு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். மேலும் இத்தகைய சத்திர சிகிச்சைகள் மூலம் உறுப்புகள் துண்டிக்கப்படாத நிலையில் தற்காத்துக் கொள்ளலாம்.
வைத்தியர் விஷ்ணுதரன் தொகுப்பு அனுஷா.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM