பதுளை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் இரசாயன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைகளின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் தியத்தலாவை, பண்டாரவளை மற்றும் பதுளை ஆகிய நகரங்களில் இரண்டு நாட்களாக இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த ஆய்வுகளின் போது, காலாவதி திகதியைத் தாண்டிய பின்னரும் பல நிலையங்களில் வைத்திருக்கப்பட்டிருந்த பல்வேறு மருத்துவப் பொருட்கள் மற்றும் இரசாயனங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மருத்துவத் துறையில் இவ்வாறான காலாவதியான இரசாயனப் பொருட்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவது கடுமையான சட்ட மீறலாகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவ ஆய்வகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM