(நமது நிருபர்)
தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கனடாவின் டொரொண்டோவை தலைமையிடமாகக் கொண்ட நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனடியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அமைப்பின் பிரதிநிதியான ரோய் சமதானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் ஏற்பட்டுள்ள சிறைச்சாலை நெருக்கடி காரணமாக, மெகசின், போகம்பரை மற்றும் கொழும்பு விளக்கமறியல் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் சிறைச்சாலைகள் சுமார் 10,000 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் வசதியைக் கொண்டிருந்தாலும், தற்போது சுமார் 40,000 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளதால் கடுமையான நெரிசல் நிலவுகிறது.
1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை மற்றும் 2000ஆம் ஆண்டு பிந்துனுவௌ படுகொலை போன்ற சம்பவங்கள் உட்பட சிறைச்சாலைகளில் வன்முறையான சூழல் உருவாகும் போதெல்லாம் தமிழ் அரசியல் கைதிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.
இதனையடுத்து, தமிழ் அரசியல் கைதிகளுக்காக தனித்துவமான பாதுகாப்பு வலயங்களை அமைத்தல், கைதிகளின் குடும்பங்களுக்கு அவர்களின் பாதுகாப்பு நிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குதல், ஐக்கிய நாடுகளின் சித்திரவதைத் தடுப்புக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு தடையற்ற கண்காணிப்பு அனுமதி வழங்குதல் ஆகியன அவசியமாகும்.
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவ வேண்டும். மேலும் கோரிக்கை கனடா வெளியுறவு அமைச்சு உள்ளிட்ட முக்கிய சர்வதேச அமைப்புகளுக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM