கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போது பறவையுடன் மோதி, இலங்கையின் மேற்கு வான்பரப்பில் நீண்டநேரம் வட்டமிட்டுக்கொண்டிருந்த துருக்கி நாட்டு பயணிகள் விமானம் இன்று சனிக்கிழமை (11) காலை 10:24 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான 'TK-731' என்ற 'A330' ரக பரந்த உடற்பகுதியைக் கொண்ட இந்த விமானம், இன்று காலை 7:07 மணியளவில் 246 பயணிகளுடன் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்திருந்தது.
பறவை மோதியதால் ஏற்பட்ட அவசர நிலையைத் தொடர்ந்து, விமானத்தின் எடையைக் குறைத்துப் பாதுகாப்பாகத் தரையிறக்கும் நோக்கில், நீர்கொழும்பு கலப்பு கடல் வான்பரப்பில் மிகக் குறைந்த உயரத்தில் வட்டமிட்டவாறு விமானம் தனது எரிபொருளைப் பயன்படுத்தி வந்தது.
மேலும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கு முன்னதாக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் அவசரக்கால மீட்புப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் முழுமையாகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததோடு, எவ்வித ஆபத்துகளுமின்றி விமானம் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM