பிறந்த பச்சிளங் குழந்தைகள் தாய்ப்பாலை பருகும் போது திடீரென்று வாந்தி எடுக்கக்கூடும். இது தொடர்ந்தால்.. பிள்ளைகளுக்கு மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும். இதற்கு வைத்தியர்கள் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, நவீன சிகிச்சைகளை வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிக்கிறார்கள்.
பிறந்து மூன்று வாரங்கள் முதல் ஆறு வாரங்களுக்குள் அல்லது மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டிய பிறகு வாந்தி எடுப்பது, தொடர்ச்சியாக பசி ஏற்படுவது, பிள்ளை பசியால் அழுவது, வயிற்றுப் பகுதியில் சுருக்கங்கள் இருப்பது, நீர் சத்து குறைபாடு, வெளியேற்றும் மலத்தில் ஏற்படும் நிற மாற்றங்கள், எடை குறைவு.. என பல்வேறு அறிகுறிகள் ஏற்பட்டால்.. அவர்களுடைய வயிற்றில் பைலோரிக்ஸ்டெனோசிஸ் எனப்படும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம்.
சிறு குடலுக்கும், வயிற்றுக்கும் இடையேயான தசை திசு இயல்பான அளவை விட சுருக்கம் அடைந்தாலோ அல்லது முழுமையான வளர்ச்சியை அடையாமலோ அல்லது அடைப்பு ஏற்பட்டிருந்தாலோ உணவு வயிற்றில் தேக்கமடையக்கூடும். இவை வாந்தியாக வெளியேறும்.
பொதுவாக எம்முடைய உணவு குழாய் பகுதி உணவை வயிற்றுக்குள் செல்வதற்கு ஒரு வால்வு அமையப்பெற்றிருக்கிறது. இந்த தசையை பைலோரஸ் என குறிப்பிடுகிறார்கள். இதன் சுருங்கி விரியும் தன்மை அல்லது திறந்து மூடும் நிலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் .. இத்தகைய நோய்க்குறி ஏற்படுகிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் கடுமையான வாந்தி, நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் விவரிக்க இயலாத நாட்பட்ட பாதிப்பும் உண்டாகக்கூடும்.
மேலே விவரிக்கப்பட்ட அறிகுறிகள் ஏற்பட்டவுடன் வைத்தியர்களை சந்தித்தால்.. எக்ஸ் ரே, அல்ட்ரா சவுண்ட், குருதி பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். இந்த பரிசோதனையின் அடிப்படையில் பாதிப்பின் வீரியம் மற்றும் தன்மையை துல்லியமாக அவதானித்து மருந்தியல் சிகிச்சை வழியாகவும் அல்லது பைலோரோமயோட்டமி எனும் சத்திர சிகிச்சை மூலமாக முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.
வைத்தியர் ஸ்ரீதேவி தொகுப்பு அனுஷா.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM