தெமட்­ட­கொடை விபத்து தாய், மக­னுக்கு பிணை

Published By: Raam

29 Jan, 2016 | 07:18 AM
image

தெமட்­ட­கொடை பகுதியில் மஞ்சள் கட­வையில் பாதை மாறிக்­கொண்­டி­ருந்த தாயையும் மக­ளையும் காரில் வேக­மாக வந்து மோதி உயி­ரி­ழக்க செய்த சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 15 வய­து­டைய சிறுவன் மற்றும் சிறுவனின் தாய் ஆகி­யோரை பிணையில் செல்ல நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. அத்­துடன் பாதிக்­கப்­பட்ட தரப்­பான கொல்­லப்­பட்ட பெண்ணின் மூத்த மக­ளுக்கு 2 இலட்சம் ரூபா கருணைக் கொடை வழங்­கவும் நீதி­மன்றம் சந்­தேக நபர்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டது.

குறித்த விபத்தின் போது காரை செலுத்­தி­ய­தாக கூறப்­படும் 15 வய­து­டைய மொஹம்மட் ஷரீப் மொஹம்மட் பாரூக் மற்றும் அவ­ருக்கு காரை செலுத்­து­வ­தற்கு அனு­ம­தித்து காரின் திறப்பை வழங்­கிய அவ­ரது தாயா­ரான 35 வய­து­டைய சகீலா பானு மொஹம்மட் சலீம் ஆகி­யோ­ருக்கே கொழும்பு மேல­திக நீதிவான் (போக்கு வரத்து) சந்­தன கலல் சூரிய இவ்­வாறு பிணையில் செல்ல நேற்று அனு­மதி வழங்­கினார்.

தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­க­ளிலும் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆம் திகதி சனிக்­கி­ழ­மை­யன்று இடம்­பெற்ற இந்த விபத்து தொடர்­பி­லான வழக்கு நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் (போக்­கு­வ­ரத்து) சந்­தன கலல் சூரிய முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன் போது விஷேட அடை­யாள அணி­வ­குப்பும் இடம்­பெற்­றது. அடை­யாள அணி வகுப்பின் போது சாட்­சி­யா­ளர்கள் இருவர் 15 வய­தான சிறு­வ­னையும் அவன் தாயையும் அடை­யாளம் காட்­டினர்.

இதன் போது சிறுவன் மற்றும் தாய் ஆகியோர் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி தமது தரப்­பி­ன­ருக்கு பிணை வழங்­கு­மாறு நீதி­வா­னிடம் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்த நீதிவான் கடும் நிபந்­த­னை­க­ளுடன் பிணை வழங்க சம்­ம­தித்தார். அதன்­படி 15 வய­தான சிறுவன் மற்றும் தாய்க்கு தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையும் 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தலா இரு சரீரப் பிணை­க­ளிலும் செல்ல நீதிவான் சம்­ம­தித்தார். அத்­துடன் 15 வய­தான சிறுவன் மற்றும் அவ­னது தாய் ஆகி­யோ­ருக்கு வெளி நாடு செல்ல தடை வித்த நீதிவான் சந்­தன கலல்­சூ­ரிய, பாதிக்­கப்­பட்ட தரப்­புக்கோ அல்­லது சாட்­சி­யா­ளர்­க­ளுக்கோ ஏதேனும் ஒரு வகையில் அழுத்­தங்­க­ளையோ அச்­சு­றுத்­தல்­க­ளையோ பிர­யோ­கித்தால் பிணையை ரத்து செய்து மீண்டும் விளக்­க­ம­றி­யலில் வைப்­ப­தாக எச்­ச­ரித்தார்.

இந் நிலையில் தாயையும் தனது சகோ­த­ரி­யையும் இந்த விபத்­தினால் இழந்­துள்ள இறந்த பெண்னின் மூத்த மக­ளுக்கு இரண்டு இலட்சம் ரூபா கருணை கொடையை வழங்க சந்­தேக நப்ர்­க­ளுக்கு உத்­தரவிட்ட நீதிவான் இது குறித்த வழக்கை எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 25 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தார்.

கடந்த 16 ஆம் திகதி இரவு 8.50 மணி­ய­ள­வில்­தெ­மட்­ட­கொடை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பேஸ்லைன் வீதியின் மவுன்ட் மேரி பிர­தே­சத்தில் மஞ்சள் கட­வையில் பாதை மாறிக்­கொண்­டி­ருந்த தாயும் மகளும் 15 வய­து­டைய சிறுவன் செலுத்­திய காரில் மோதி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.

சம்­ப­வத்தில் ரி 20 தோட்டம், பேஸ்லைன் வீதி கொழும்பு 8 என்ற முக­வ­ரியில் வசித்து வந்த வீர­சிங்க ஆரச்­சி­லாகே அனுலா (வயது 47), அவ­ரது 10 வய­தான மகள் சமாதி ரஸ்­மிகா ஆகி­யோரே உயி­ரி­ழந்­துள்­ளனர். காரை செலுத்­தி­ய­தாக கூறப்­படும் 15 வய­து­டைய மொஹம்மட் ஷரீப் மொஹம்மட் பாரூக் மற்றும் அவ­ருக்கு காரை செலுத்­து­வ­தற்கு அனு­ம­தித்து காரின் திறப்பை வழங்­கிய அவ­ரது தாயா­ரான 35 வய­து­டைய சகீலா பானு மொஹம்மட் ஷரீப் ஆகியோர் சந்­தேக நப்ர்­க­ளாக பெய­ரி­டப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராகவே கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்ரு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58