இன்றைய சூழலில் உயர்கல்வி கற்றிருந்தாலும் தொழிற்கல்வி கற்றிருந்தாலும் அனுபவம் இருந்தாலும் நேர்காணலில் பங்கு பற்றும் போது போட்டிகளை சமாளிக்க வேண்டிய கடினமான நெருக்கடிகளை எதிர் கொள்ளாத இளைய தலைமுறையினர் இருக்க மாட்டார்கள்.
போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் தகுதிகளையும், திறமைகளையும் வளர்த்துக் கொண்டு ,வேலை வாய்ப்பை பெற்று விடுவதில் தீவிரம் காட்டும் இளைய தலைமுறையினருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அவர்களால் தங்களுடைய திறமைக்கும் தகுதிக்கும் உரிய பணி வாய்ப்பு கிட்டும். இந்தத் தருணத்தில் அதிர்ஷ்டம் மட்டுமே கை கொடுக்கும் சிறந்த வழிமுறையாகும். இதனை பெறுவதற்கு கிடைப்பதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல்வேறு சூட்சம குறிப்புகளை வழங்கி உள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள் : பச்சரிசி
நீங்கள் நேர்காணலில் பங்குபற்றுவதற்காக தயாராகி வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன் ஏழு என்ற எண்ணிக்கையிலான முனை முறியாத பச்சரிசியை எடுத்து, அதனை உங்களுடைய வலது கை உள்ளங்கையில் வைத்து மூடி, நேர்காணலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையை மனதில் இருத்தி, ஒரு முகமாக தியானித்து.
அந்த வலது கையை உங்களுடைய உச்சம் தலையில் வைத்து மீண்டும் ஒரு முறை பிரார்த்திக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து அந்த வலது கை உள்ளங்கையில் இருக்கும் ஏழு என்ற எண்ணிக்கையிலான அரிசியை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு நேர்காணலில் பங்கு பற்றி தன்னம்பிக்கையுடன் பதிலளித்து விட்டு வீடு திரும்புகையில் எதிர்ப்படும் ஆலயத்தில் அல்லது ஆலய வளாகத்தில் அந்த ஏழு என்ற எண்ணிக்கையிலான அரிசியை எங்கேனும் வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் வீட்டுக்கு திரும்பினால். விரைவில் உங்களுக்கான வேலை வாய்ப்பு ஆணை கிடைக்க பெறுவீர்கள்.
பச்சரிசி என்பது சந்திரனையும், உச்சந்தலை என்பது எம்முடைய உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் ஒன்றிணையும்.. சுட்டுக் காட்டுவதால் அங்கு நீங்கள் செய்யும் அரிசி வழியிலான பிரார்த்தனையை இந்த பிரபஞ்சம் ஏற்றுக்கொண்டு, உங்களுக்கு நல்வழி காட்டும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM