(எம்.மனோசித்ரா)
நீர்கொழும்பு சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, தற்காலிக அடிப்படையில் 'மஹமோதர' மற்றும் 'பழைய போகம்பரை' வளாகங்களைச் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கமைய சிறைச்சாலைகளாக நிறுவுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சினால் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக, அந்த வளாகம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதுவொரு குற்றவியல் பிரதேசமாகவும் கருதப்படுகிறது. இதனால், அங்கு கைதிகளைத் தடுத்து வைப்பது பொருத்தமற்றது எனச் சிறைச்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பாகத் தங்களது விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஏதுவாக, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் பெரும்பாலோர் தற்காலிகமாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தைப் புனரமைக்கும் பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, தற்போது இயங்கி வரும் சிறைச்சாலைகளின் நெரிசல் நிலைமை மற்றும் கைதிகளின் நலன் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, குறிப்பிட்டளவிலான கைதிகளைத் தற்காலிக அடிப்படையில் வேறு பொருத்தமான இடங்களுக்கு மாற்ற வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நீர்கொழும்பு சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, தற்காலிக அடிப்படையில் 'மஹமோதர' மற்றும் 'பழைய போகம்பரை' வளாகங்களைச் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கமைய சிறைச்சாலைகளாக நிறுவுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM