கிரிபாவ மற்றும் பன்னலவில் வீதி விபத்துக்கள்: மூவர் பலி

09 Jul, 2026 | 12:57 PM
image

கிரிபாவ மற்றும் பன்னல ஆகிய பகுதிகளில் நேற்று புதன்கிழமை (09) இடம்பெற்ற இரு வேறு வீதி விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் உட்பட மொத்தம் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கிரிபாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரகும்புர வீதியில் தம்புத்தேகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுடன், எதிர்த்திசையில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களினதும் ஓட்டுநர்கள் இருவரும், ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண் ஒருவரும் மற்றும் 7 வயதுக் குழந்தையும் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக பெரகும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே ஒரு ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக தம்புத்தேகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றைய ஓட்டுநரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர்கள் பம்பரே மற்றும் பெரகும்புர பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 63 வயதுடையவர்களாவர்.

இதேவேளை,  பன்னல - குளியாப்பிட்டிய வீதியின் பன்னல நகருக்கு அருகில் மற்றுமொரு விபத்து பதிவாகியுள்ளது.

குளியாப்பிட்டியவிலிருந்து பன்னல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மீது, எதிரே அதிவேகமாக வந்த லொறி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் பலத்த காயமடைந்த நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கோனவில பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறி ஓட்டுநர் பன்னல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இ்த சம்பவங்கள் குறித்து பொலிஸார்  மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைகளை விடுத்து புலம்பெயர் அமைப்புகளை நீதி...

2026-07-10 14:29:42
news-image

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு...

2026-07-10 22:03:37
news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38