(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பள பிரச்சினைக்கு நாங்கள் தான் சிறந்த தீர்வினை வழங்கினோம். சம்பள அதிகரிப்பை தொடர்ந்து பெருமளவிலானோர் பெருந்தோட்டத் தொழிற்றுறையில் மீண்டும் இணைந்துள்ளார்கள். காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒரே கட்டத்தில் தீர்வு காண முடியாது. இருப்பினும் தீர்வு காணலுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளோம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆரியவங்ச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இரத்தினபுரி மாவட்டத்தில் 50 தோட்ட கிராமங்கள் உள்ளன. இந்த தோட்டங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தோட்ட புறங்களில் கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் நீர் வசதிகள், வீடமைப்பு உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் பிரதேச செயலகம் மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.
இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய வீடமைப்பு அபிவிருத்தித் திட்டம் ஊடாக புதிய வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளோம். கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் ஊடாக பெருமளவிலான லயன் அறைகள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
இந்திய மற்றும் இலங்கை ஒருங்கிணைந்த வீடமைப்புத் திட்டத்துக்கமைய கடந்த ஆண்டு பெருமளவிலான வீடுகள் புனரமைக்கப்பட்டு, பயனாளர்களுக்கு உரித்து பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5000 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பள பிரச்சினைக்கு நாங்கள் தான் சிறந்த தீர்வினை வழங்கினோம். சம்பள அதிகரிப்பை தொடர்ந்து பெருமளவிலானோர் பெருந்தோட்டத் தொழிற்றுறையில் மீண்டும் இணைந்துள்ளார்கள். காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒரே கட்டத்தில் தீர்வு காண முடியாது. இருப்பினும் தீர்வு காணலுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளோம் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM