கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது!

09 Jul, 2026 | 10:43 AM
image

சட்டவிரோதமான முறையில் தன்வசம் வைத்திருந்த இரண்டு கஜமுத்துக்களை  விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேகநபர்களும் நேற்று புதன்கிழமை  (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொம்பனித்தெரு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெட்ரோ வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் வைத்து இந்த கஜமுத்துக்களை விற்பனை செய்யத் தயாராக இருந்த போதே இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மூன்று சந்தேகநபர்களும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 46 மற்றும் 47 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தலவத்துகொட, மீதலாவ மற்றும் தொலஸ்பாகே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08