(எம்.மனோசித்ரா)
கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஸ் கருணாதிலக தெரிவித்தார்.
குறிப்பாகக் கலைப்பீட மாணவர்களிடையே பாதிப்பு அதிகமாகக் காணப்படுவதால், மாணவர்களின் உடல்நலன் மற்றும் கல்வித் தொடர்ச்சியைக்கருத்தில் கொண்டு கலைப்பீடம் உள்ளிட்ட சில பீடங்களின் விரிவுரைகள் மட்டும் ஒரு வாரக் காலத்திற்கு இணைய வழியில் அல்லது ஹைப்ரிட் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், பல்கலைக்கழகம் மூடப்படவில்லை என்றும், விரிவுரைகள் மட்டுமே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளன என்றும் துணைவேந்தர் தெளிவுபடுத்தினார்.
ஒரே வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பீடம், கல்வியியல்பீடம் மற்றும் முகாமைத்துவப்ப்பீடம் ஆகியவற்றில் அதிகப் பாதிப்புகள் இல்லை என்றாலும், பாதுகாப்பு கருதி சூழ்நிலைக்கு ஏற்ப இணையவழி அல்லது ஹைப்ரிட் முறைக்கு மாறுவதற்கு அவற்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM