ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு சரக்குகளுடன் பயணித்துக் கொண்டிருந்த K2 ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737-400 சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியாகின.
பதிவு எண் AP-BOI கொண்ட இந்த போயிங் 737-400 சரக்கு விமானம், பாகிஸ்தான் நேரப்படி புதன்கிழமை இரவு 9.21 மணியளவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை திடீரென இழந்தது.
விமானத்தில் தலைமை விமானி முகமது ரிஸ்வான் இத்ரீஸ் உள்ளிட்ட ஐந்து பணியாளர்கள் பயணித்திருந்தனர்.
தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஓர்மாரா நகரின் தெற்கே சுமார் 53 கடல் மைல் தொலைவில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பாகிஸ்தான் கடற்படை மற்றும் பாகிஸ்தான் கடலோரப் பாதுகாப்பு முகமை ஆகியவை வான் மற்றும் கடல்வழி வளங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதுவரை விமானப் பணியாளர்கள் எவரும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற அச்சம் அதிகாரிகள் மத்தியில் நிலவி வருகிறது.
இதற்கிடையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போன விமானப் பணியாளர்களை தேடும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM