(எம்.மனோசித்ரா)
விவசாயத்தை ஒரு மனித உரிமையாகக் கருதி, அதனை நாட்டின் அடிப்படை உரிமையாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (8) விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
தற்போது அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மட்டுமே விவசாயிகளை முக்கியமானவர்களாகக் கருதுகின்றனர். விவசாயியை ராஜாவாக்குவோம் எனக் கூறி வாக்குகளைப் பெற்றுவிட்டு, இறுதியில் அவர்களைக் கைவிட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் வயல்களில் இறங்கி உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் எனக் கூறும் அமைச்சர்கள், அதன் பின்னர் விவசாயிகளை நட்டத்திலேயே விடுகின்றனர்.
தற்போது ஒரு கிலோ நெல்லுக்கான உற்பத்திச் செலவு 137 ரூபாவாக இருக்கும் நிலையில், அரசாங்கத்தின் உத்தரவாத விலை 120 ரூபாவாக மட்டுமே உள்ளது. இதனால் விவசாயிகள் தொடர்ந்தும் நட்டமடைந்து வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர். விவசாய உற்பத்திச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் பாரிய நெருக்கடி காணப்படுகிறது.
விதைகள், உரம், எரிபொருள், விவசாய இரசாயனங்கள் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் யானை-மனித மோதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும், விவசாயிகள் தங்களின் சொத்துக்களை அடகு வைத்தே விவசாயம் செய்கின்றனர். ஆனால் இதில் அரசாங்கத்தின் தலையீடு மிகவும் குறைவாகவே உள்ளது. விவசாயத்தை வலுப்படுத்த மலிவு விலையில் தரமான உரம் மற்றும் விதைகளைப் பெற்றுக் கொடுப்பதுடன், உற்பத்திச் சங்கிலியில் அரச தலையீடு அவசியமாகிறது என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM