தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் 2.5 பில்லியன் டொலர் மக்கள் பணம் மாயம் – ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு  

08 Jul, 2026 | 07:22 PM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, கடந்த ஆட்சி காலங்களில் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கெதிராக வழக்குத் தொடர்வது போல் நாடகமாடி, அதைவிடப் பெரிய அளவில் பொது மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டினார்.

கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று புதன்கிழமை (8) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக வரலாற்றில் எங்குமே இல்லாத நடைமுறையாக, 'சிவப்பு லேபல்' ஒட்டப்பட்டு பரிசோதிக்கப்பட வேண்டிய 323 கொள்கலன்கள் எந்தவொரு சோதனையும் இன்றி துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. இதில் இரண்டு கொள்கலன்களில் போதைப்பொருள் இருந்ததாக அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது.

எஞ்சிய கொள்கலன்களில் ஆயுதங்கள் கூட வந்திருக்கலாம் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டுக்கு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பிரம்மாண்ட மோசடிகள் மற்றும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் காரணமாகவே இன்று மின்சாரக் கட்டணமும், டீசல் விலையும் உயர்த்தப்பட்டு, அதன் ஒட்டுமொத்த சுமை அப்பாவி மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 2.5 பில்லியன் டொலர் பணத்திற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஏழை மக்களுக்கான 'அஸ்வெசும' நிதி உள்ளிட்டவை திட்டமிட்டுச் சூரையாடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணை சட்டமா அதிபரின் ஆலோசனைகள் தேவைப்படுவதால் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் முனகிக்கொண்டிருக்க வேண்டாம் என்று சவால் விட்டு ஆட்சியைத் தொடங்கியவர்கள், எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் எப்படி முனகப் போகிறார்கள் என்பதை இன்னும் சில வருடங்களில் வரவிருக்கும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் காண முடியும். அரசாங்கத்தின் மீதான மக்கள் எதிர்ப்பு இப்போதுதான் படிப்படியாகச் சூடேறி வருகிறது. மக்கள் இந்த யதார்த்தத்தைத் தங்களது சொந்த அனுபவத்தின் மூலம் முழுமையாக உணரும் வரை எதிர்க்கட்சியாகத் நாங்கள் பொறுமையுடன் கவனித்து வருகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08